காஜியாபாத்தின் தஸ்னா கோவிலில் ஒரு சிறு முஸ்லீம் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற ஒரு சில நாட்களில் இதுபோன்ற மற்றொரு சம்பவம் உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில், 18 வயது சிறுவன் முஸ்லீம் இளைஞர் ஒருவர் எட்டாவாவில் உள்ள ஒரு கோவிலில் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். எட்டாவா மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள பிதாம்பர மாதா கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. […]
Author: NewsCap.in Staff
பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி சிறை சென்றேன் – பங்களாதேஷில் பிரதமர் மோடி பேச்சு !
கொரோனா காரணத்தால் ஒரு வருட காலத்திற்கும் மேலாக வெளிநாடு செல்லமுடியாத நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ளார். 50 வது சுதந்திர விழாவை கொண்டாட உள்ள பங்களாதேஷ் நாட்டிற்கு மோடி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் தனது அரசியல் வாழ்க்கையின் முதல் ஆர்ப்பாட்டங்களில் ஒன்று அண்டை தேசத்தின் சுதந்திரத்திற்காகனது என்று மோடி கூறினார். டாக்காவில் உள்ள தேசிய அணிவகுப்பு மைதானத்தில் பிரதமர் மோடி பங்களாதேஷின் தேசிய தின விழாவில் தனது சக […]
மகாராஷ்டிரா: பாஜக/ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக இருந்து பணியாற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரிடம் கோரிக்கை !
மகாராஷ்டிராவில் முந்தைய தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் போது பாரதீய ஜனதா கட்சி அல்லது ஆர்எஸ்எஸின் அனுதாபிகளாக இருந்து பணியாற்றிய அரசாங்க அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் முதலமைச்சர் (முதல்வர்) உத்தவ் தாக்கரேவை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை வைத்தனர். மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் பொலிஸ் இடமாற்றங்களில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்தனர். […]
குஜராத்: அண்டை வீட்டுகாரரின் மனைவியுடன் பாஜக தலைவர் தப்பி ஓட்டம்; 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் !
அகமதாபாத், குஜராத்: அண்டை வீட்டுகாரரின் மனைவியுடன் உறவு வைத்திருந்ததாகவும், அப்பெண்ணை அழைத்து கொண்டு ஓடி விட்டதற்காகவும் குஜராத் பாஜக செயற்பாட்டாளர் ஒருவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் உள்ள பருச் மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பருச் பாஜக நகரத்தின் யுவ மோர்ச்சாவின் பொதுச் செயலாளர் ஹிமான்ஷு வைத். இவர் அடிக்கடி தனது அண்டை வீட்டாரின் வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்ததாக பிரபல உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. அண்டை வீட்டுக்காரரின் மனைவி கடந்த சில நாட்களாக காணாமல் போனதால் […]
மோடியின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷில் போராட்டம்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பங்களாதேஷ் போலீசார் வியாழக்கிழமை ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். தலைநகர் டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்ற போது, பலரும் கற்களை அதிகாரிகள் மீது வீசியதில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர் என்று பொலிசார் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மட்டுமே 2000 பேர் இணைந்ததாக போராட்டகாரர்களின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். மோடி மத பதட்டங்களைத் தூண்டுவதாகவும், 2002 ல் […]
‘முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து விடுவிக்கப்படுவார்கள், அது ஒரு தீய வழக்கம்’ – பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப்
உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கடந்த புதன்கிழமையன்று முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து “விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறினார். இதை தீய வழக்கம் என்று வர்ணித்த அவர், இதனை இந்தியாவில் தடை செய்யப்பட்ட மூன்று தலாக் சட்டத்துடன் ஒப்பிட்டு பேசினார். மசூதிகளில் ஒலிபெருக்கிகள் காரணமாக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவுகளின்படி சப்தத்தின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கூறி, பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேடுக்கு அமைச்சர் எழுதிய கடிதம் எழுதியுள்ள […]
‘மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. அவர் பொய்களை மட்டுமே பேசுகிறார்’- மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை “பொய்யர்” என்று கூறினார். மேலும் பாஜக மாநிலத்திற்குள் குண்டர்களை அழைத்து வருவதாக குற்றம் சாட்டினார். கடந்த புதன்கிழமை அன்று இவ்வாறு மம்தா பேசி உள்ளார். பிஷ்ணுபூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “நான் பிரதமர் பதவிக்குரியவரை மிகவும் மதித்து வந்தேன், மதிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாமல் இல்லை ஆனால் பிரதமர் மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. அவர் பொய்களை மட்டுமே […]
பாஜக ஆளும் ஹரியானா குர்கானில் செவ்வாயன்று இறைச்சி கடைகள் மூட உத்தரவு !
பாஜக ஆளும் ஹரியானாவில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் ஒரு தொடர் கதையாக உள்ளது. அதில் ஒன்றாக தற்போது குருக்ராம் மாநகராட்சி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என சட்டம் கொண்டு வந்துள்ளது பாஜக வின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகம். குடிமை அமைப்பின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 129 உரிமம் பெற்ற இறைச்சி கடைகளில், “குறைந்தது 120” செவ்வாயன்று மூடப்படிருந்தது என எம்.சி.ஜி.யின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருகிராம் மாநகராட்சி மற்றும் குர்கான் […]
டில்லி: ‘நடுரோட்டில் பாகிஸ்தான் முர்தாபாத்’ என கோஷமிட சொல்லி கொடூரமாக தாக்கியவர் மீது வழக்கு பதிவு !
வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் ‘பாகிஸ்தான்/ ஒவைசி முர்தாபாத்’ , ‘இந்தியா ஜிந்தாபாத்’ என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கப்படுகிறார். வீடியோவில் உள்ள மஞ்சள் நிற சட்டை அணிந்தவர் அஜய் கோஸ்வாமி பண்டிட். டெல்லி கலவரம் வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டவர். காணொளி வைரல் ஆனதை தொடர்ந்து அஜய் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. வீடியோவில், தாக்கப்படுபவர் சித்திரவதை செய்யப்பட்டு உடல் ரீதியாக தாக்கப்படுகையில் அருகில் உள்ளோர் சிரிப்பதைக் கேட்க முடிகிறது. பாதிக்கப்பட்டவர் கோஸ்வாமியின் கால்களைப் பிடித்து, […]
‘நாங்க ஜெயிச்சா லவ் ஜிஹாதுக்கு எதிரா சட்டம் கொண்டு வருவோம்’- கேரள பாஜக அறிவிப்பு !
கேரளாவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான தனது அறிக்கையை பாஜக புதன்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கையில் (இல்லாத) லவ் ஜிஹாதுக்கு எதிராக ஒரு சட்டம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள், நிலமற்ற ஒவ்வொரு எஸ்சி / எஸ்டி குடும்பத்திற்கும் ஐந்து ஏக்கர் நிலம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு நபருக்கு வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சபரிமாலாவின் மரபுகளைப் பாதுகாப்பதற்காக சட்டத்தை இயற்றுவோம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் கேரளாவில் உள்ள ஒற்றை பாஜக […]
மோடிக்கு எதிரான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தயாரா ? சிவசேனா கேள்வி!
குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அக்கடிதத்தின் அடிப்படையில் சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தயாரா என்று ஆளும் சிவசேனா செவ்வாய்க்கிழமை பாஜக விடம் கேள்வி எழுப்பி உள்ளது. இதனிடையயே மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளும் சிவசேனா கட்சி செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தது. அதில் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் […]
கர்நாடகா: தின்பண்டங்களை திருடியதற்காக சிறுவனை சித்திரவதை செய்து கொன்ற கடை உரிமையாளர் !
மார்ச் 16 அன்று கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள கடையில் இருந்து தின்பண்டங்களை திருடியதாக 10 வயது சிறுவனை கடை உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் சித்திரவதை செய்து கொன்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனுக்கு சித்திரவதை: ஹரிஷய ஹிரேமத் என்ற அந்த சிறுவனை ஒரு அறையில் பூட்டி, கல்லில் கட்ட வைத்து, கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த திங்களன்று மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளான் சிறுவன். ஹனகல் தாலுகாவில் உள்ள உபனாசி […]
மே.வங்கம்: குளித்து கொண்டிருந்தவருடன் போஸ் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!
சமீபத்தில் அமித் ஷா முன்னிலையில் பாஜக வில் இணைந்த மே .வங்க சினிமா நடிகர் ஹிரான் சாட்டர்ஜிக்கு கரக்பூர் சதர் தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது. இந்நிலையில் அவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். எந்த அளவிற்கு என்றல் குளித்து கொண்டிருக்கும் ஒருவருடனும் கூட நின்று போஸ் கொடுத்து, வாக்குகளை சேகரித்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆனதை தொடர்ந்து இவர் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார். மார்ச் 27 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள மே.வங்க […]
வாக்காளர்கள் செல்போன் எண்ணை ஆதார் மூலம் எடுத்து பாஜக வாட்ஸாப் பிரச்சாரம் – நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் !
புதுச்சேரியில் ‘வாட்ஸ் ஆப் குழுமம்’ துவங்கி பா.ஜ.க. செய்து வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, ‘வாட்ஸ்அப் குழுமங்களை’ தொடங்கி பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். […]
மாட்டிறைச்சி என்பது இந்தியாவின் ‘தேசிய உணவு’ – அசாம் பாஜக வேட்பாளர் தேர்தல் பரப்புரை !
ஆர்.எஸ்.எஸ்/பாஜக ஆதரவாளர்கள் எப்போதும் நாடு தழுவிய மாட்டிறைச்சி தடை கொண்டு வர வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவர் மாட்டிறைச்சி இந்தியாவின் ‘தேசிய டிஷ்’ என்று கூறியுள்ளது, பாஜக வேட்பாளர்கள் ஓட்டு வேண்டுமெனில் எதையும் சொல்வார்கள் என்ற விமர்சனத்தை பெற்று தந்திருக்கிறது. அசாம் கவ்ரிபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் முஷாரி, முஸ்லீம் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் ‘மாட்டிறைச்சி’ என்பது இந்தியாவின் […]