Dalits Hindus Uttar Pradesh

உபி: தனது பைக்கை தொட்டதால் தலித் சமூக மாணவரை மெட்டல் ராடால் தாக்கிய ஆசிரியர்!

ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மா தன்னை மெட்டல் ராடால் (உலோகத்தாலான ராடு) மற்றும் துடைப்பத்தால் தாக்கி, கழுத்தை நெரித்ததாகவும் பாதிக்கப்பட்ட தலித் சமூக மாணவர் தெரிவித்துள்ளார். ‘பள்ளியின் மற்ற ஊழியர்கள் சிறுவனை மீட்டனர்’ என போலீசார் தெரிவித்தனர். பல்லியா (உத்தரப்பிரதேசம்): தனது மோட்டார் சைக்கிளைத் தொட்டதற்காக, தலித் மாணவர் ஒருவர் வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டு, அவரது ஆசிரியரால் உலோகக் கம்பியால் தாக்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். கிருஷ்ண மோகன் சர்மா என்ற ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். […]

தலித்
Cow vigilantes Dalits Hindutva Karnataka

கர்நாடகா: தலித் சமூகத்தை சேர்ந்தவரை தாக்கிய பஜ்ரங் தள இந்துத்துவாவினர்; தலித் அமைப்பினர் போராட்டம்!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்திற்குட்பட்ட சக்லேஷ்பூரில் திங்கள்கிழமை, பயங்கரவாத அமைப்பாக விமர்சிக்கப்படும் பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், சொந்த மாட்டை கொண்டு சென்று கொண்டிருந்த தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தாக்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் வெடித்தன. ஹலசுலிகே கிராம பஞ்சாயத்தின் முன்னாள் துணைத் தலைவரான மஞ்சுநாத், பஜ்ரங் தள் இயக்கத்தினரால் கொடூரமாக ஆக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றிய தகவல் பரவியதையடுத்து, பல தலித் அமைப்புகள் மாவட்டத்தில் போராட்டம் நடத்தின. தலித் அமைப்புகள் போராட்டம்: போராட்டம் வலிமை அடைந்ததை […]

Alleged Upper Caste atrocities Dalits Gujarat Hindus

குஜராத்: தலித் பெண் சமைத்ததால் சாப்பிட மறுக்கும் மாணவர்கள்!

அகமதாபாத்: ஜூன் 16 முதல், கோலி, பர்வாத், தாக்கூர் மற்றும் காத்வி போன்ற ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மோர்பியில் உள்ள ஒரு பள்ளியில் அரசாங்கத்தின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை உட்கொள்ளவில்லை. மாணவர்கள் சாப்பிடாததற்கு காரணம்: இதற்குக் காரணம் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணி ஒரு தலித் சமூக பெண்ணுக்கு வழங்கப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அப்பெண்மணி சமைத்த உணவை சாப்பிடுவதை விரும்பவில்லை என்பதே. பள்ளி அதிகாரிகள் மற்றும் மாவட்ட […]

Alleged Upper Caste atrocities Dalits Uttar Pradesh

உபி: 4 கிலோ அரிசி திருடியதாக தலித் சமூக சிறுவன் அடித்து கொலை!

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள சூல்ரா கிராமத்தில் நான்கு கிலோ அரிசி மற்றும் மாம்பழங்களைத் திருடியதாக கூறி தலித் சமூக சிறுவன் விஜய் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வாரணாசி-படோஹி சாலையில் உள்ள கப்சேதியில் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தந்தை அளித்த புகாரின் பேரில், கப்சேதி போலீசார் […]

Alleged Upper Caste atrocities Dalits Uttar Pradesh

உபி: தலித் சமூக பெண்ணின் ஆடையை கழற்ற முயன்றதற்காக 4 ‘உயர்சாதியினர்’ மீது வழக்கு பதிவு !

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் 38 வயது தலித் சமூக பெண்ணை வியாழக்கிழமை அன்று மானபங்கப்படுத்த முயன்றதாக உயர் சாதி சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். “நான் அந்த இடத்தை அடைந்தபோது, ​​அவர்கள் என் மகன்களை தாக்குவதை கண்டேன், என் மகன்களை விட்டுவிடும்படி அவர்களிடம் மன்றாடினேன், ஆனால் அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை. […]

Activists Dalits Karnataka RSS

கர்நாடகா: தலித் சமூக நூலாசிரியர் எழுதிய புத்தகத்தால், கடும் கோபத்தில் ஆர்.எஸ்.எஸ் !

கர்நாடகாவில் பிரபல தலித் எழுத்தாளரும் ஆர்வலருமான தேவனூர் மகாதேவா ஆர்எஸ்எஸ் பற்றி எழுதியுள்ள புத்தகம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வலதுசாரிகள் இதை ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான பிரச்சாரம் என்கிறார்கள். “ஆர்எஸ்எஸ் ஆலா அகலா” (ஆர்எஸ்எஸ், அதன் ஆழமும் அகலமும்) என்ற புத்தகத்தின் விற்பனை கர்நாடக மாநிலத்தில் சாதனை படைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வியாழன் அன்று மகாதேவாவுக்கு ஆதரவாக, “ஆர்எஸ்எஸ் பற்றி அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கருத்து தெரிவித்துள்ளார். நூலை தடை செய்யத்துடிக்கும் வலதுசாரிகள்: இந்நூலை […]

Alleged Police Brutalities Dalits Uttar Pradesh

உ.பி: போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபர்.. உடலும் வலுக்கட்டாயமாக எரிப்பு!

உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான தலித் கௌதம், ஜூன் 24 அன்று இரவு அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஃபரூகாபாத் மாவட்டம் மேராபூர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக மது விற்பவர்களை பிடிக்கவே போலீசார் கவுதமின் வீட்டை சோதனையிட சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகே எஃப்ஐஆர் : ஆரம்பத்தில் கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல […]

Dalits Education Karnataka Muslims RSS Saffronization Students

தலித் எழுத்தாளர்கள் நீக்கம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சேர்ப்பு; காவிமயமாக்கப்பட்டுள்ள கர்நாடக பாடப்புத்தக மாற்றங்களின் முழு பட்டியல்!

கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, […]

Activists BJP Dalits Karnataka

தலித் எழுத்தாளரின் கவிதையை பாடப்புத்தகங்களில் இருந்து கைவிட கர்நாடகா பாஜக அரசு முடிவு!

கர்நாடகாவில் பாடநூல் திருத்தம் தொடர்பான சர்ச்சை தொடர் கதையாகி உள்ளது. சூரியனும் சந்திரனும் கடவுள் இல்லை என கூறும் பிரபல தலித் எழுத்தாளர் ஒருவரின் கவிதையை கைவிட ஆளும் பாஜக உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சித்தலிங்கய்யாவின் “பூமி” கவிதையை நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கி கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத உணர்வுகளை புண்படுத்தியதாக கவிதைக்கு எதிராக எழுந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை […]

Dalits Rajasthan

ராஜஸ்தான்: தலித் சமூகத்தவர் திருமண ஊர்வலத்தின் போது சாதி ரீதியாக அவதூறு கூறி ரகளை !

கோட்டா (ராஜ்): ராஜஸ்தானின் கோட்டாவில், தலித் ஒருவரின் திருமணத்திற்கு முந்தைய ஊர்வலத்தின் போது தலித் வீட்டாரை, ஜாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காகவும், குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 151 இன் கீழ் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் ஏற்கனவே இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்று டிஎஸ்பி மற்றும் வட்ட அதிகாரி (சிஓ) பிரவீன் […]

Activists Dalits Gujarat

குஜராத்: தலித் ஆர்டிஐ செயற்பாட்டாளரின் கொலை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் இடைநீக்கம் செய்யப்பட்டார்!

குஜராத்: சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதியின்றி தலித் தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தை பலமுறை எழுப்பியதை அடுத்து, “ஒழுக்கமின்மை” காரணமாக குஜராத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, மாநில சட்டமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியின் உத்தரவின் பேரில் அவர் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதே போல கடந்த வியாழக்கிழமையும் இதே காரணத்திற்காக ஜிக்னேஷ் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மார்ச் 2 ம் தேதி போலீஸ்ஸார் […]

azad பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர்
Dalits Hindutva RSS

நாக்பூர் : ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி!

மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தின் பேரணிக்கு இன்று அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த பேரணி நாக்பூரின் ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்மிருதி மந்திர் முன் சனிக்கிழமை நடைபெற உள்ளது. போலீசார் மறுப்பு: ரஷிம்பாக் மைதானத்தின் உரிமையாளர்களான சிபி & பெரார் எஜுகேஷன் சொசைட்டியிடம் உரிய தொகை வழங்கப்பட்டு முறையான அனுமதியையும் பெற்ற பிறகு ஆசாத்தின் பேரணி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என கூறி உள்ளூர் கோட்வாலி […]

திருட முயற்சித்ததாக கூறி தலித் இளைஞர்களின் மறைவுறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ ட்ரைவர் செலுத்தி சித்திரவதை ..
Dalits Rajasthan

திருடியதாக கூறி தலித் இளைஞர்களின் மறைவுறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ ட்ரைவர் செலுத்தி சித்திரவதை ..

ராஜஸ்தான்: கடந்த ஞாயிற்று கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தின் நகவ்ர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனம் விற்கும் ஷோரூம் ஒன்றில் 2 தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பணம் திருட முயற்சித்ததாக கூறி ஷோரூமில் வேலை பார்க்கும் நபர்கள் கொடூரமாக தாக்கி, அவரது அந்தரங்க உறுப்புகளில் பெட்ரோல் மற்றும் சுகுரூ ட்ரைவரை செலுத்தி சித்திரவதை செய்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம் பெட்ரோல் பங்கில் நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்தும், தாக்கப்பட்ட இரு […]

தலித் இளைஞர் விழுப்புரம் கொலை வன்னியர்
Dalits Tamil Nadu

தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கும்பல் படுகொலை; தடுக்க முயன்ற அவரது தங்கையை குழந்தையுடன் எட்டி மிதித்த மிருகங்கள்!

விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தலித் சமூகத்தை சேர்ந்த 24 வயதான சக்திவேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மேல்ஜாதி என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒருவருக்கு சொந்தமான வயலில் இயற்கை தேவையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை பிடித்து அடித்தே கொன்றுள்ளது ஒரு வெறிபிடித்த கும்பல். இந்த கொடூர சம்பவம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது, இளைஞர் தாக்கப்படுவது தொடர்பான வீடியோக்கள்வைரல் ஆனது. அதற்கு பிறகு வெள்ளிக்கிழமையன்று போலீசார் 7 பேரைக் கைது செய்து, மேலும் […]

stop rape
Crimes Against Women Dalits Gujarat

குஜராத்: தலித் இளம்பெண்(19) கற்பழித்து கொலை – 4 பேர் கும்பல் அராஜகம் !

கண்டுகொள்ளாத மீடியா: குஜராத்தின் மொடாசாவில் உள்ள சைரா கிராமத்தில் 19 வயது தலித் சமூக பெண் ஒருவரை கடத்தி, கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொலை செய்து, பெண்ணை ஆலமரத்தில் தூக்கிலிட செய்துவிட்டு சென்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. எனவே தான் இது குறித்த செய்தி எந்த தொலைக்காட்சியிலும் முக்கியத்துவத்துடன் காண்பிக்கப்படவும் இல்லை. அலைக்கழித்த போலீஸ்: கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி , எங்கள் வீட்டு பெண் எங்கு தேடியும் காணவில்லை என […]