Tamil Nadu

எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைப்பு: எம்.பி. ஞானதிரவியம் கண்டனம் !

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு மீட்டர்கேஜ் காலகட்டத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் (திருநெல்வேலி – சென்னை எழும்பூர்) நெல்லை விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் கணிசமான அளவில் குறைத்துள்ளது. இவ்வாறு குறைக்கப்பட்ட முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பாதி பெட்டிகள் இந்திய அஞ்சல் துறை ஆர்எம்எஸ் சேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் நெல்லை விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாமல் பயணிக்கும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து முக்கிய ரயில்களும் 24 […]

Hindutva Islamophobia Muslims Uttar Pradesh

புகழ்பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்களின் மீதான தடை சட்ட விரோதமானது – எஸ்டிபிஐ கண்டனம்..!

புகழ்பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்களை சட்ட விரோதமாக்கிய உத்தரபிரதேச பாஜக அரசாங்கத்தின் செயல் முஸ்லீம் சமூகத்தை அந்நியப்படுத்தும் ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தின் ஒரு பகுதி என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழ.ஷர்புதீன் அஹமத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் மாநில மதரஸா கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அவர்கள் ஒரு கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்ததாக உத்தரபிரதேச அரசாங்கம் […]

Shahi mosque hindu.mob
Hindus Hindutva Mosques Muslims Telangana

ஹைதராபாத்: குதுப் ஷாஹி மசூதி நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது! இந்து தெய்வ சிலை அகற்றம்!

ஹைதராபாத்: ராய்துர்காமில் உள்ள பழமையான குதுப் ஷாஹி மசூதியின் கூட்டுக் கணக்கெடுப்பு, தெலுங்கானா மாநில வக்ஃப் வாரியம் மற்றும் ரங்கா ரெட்டி மாவட்ட அதிகாரிகளால் புதன்கிழமை மஸ்ஜித் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் AIMIM எம்எல்ஏ கவுசர் மொகிதீன் முன்னிலையில் நடைபெற்றது. ஆவணங்களை சரிபார்த்த பிறகு, சர்ச்சைக்குரிய சர்வே எண் 82 மசூதிக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. பள்ளிவாசல் வளாகத்தில் இந்து தெய்வம்: அதனுடன், குதுப் ஷாஹி மசூதியின் எல்லைச் சுவரைப் புனரமைப்பதற்காக ரூ. 5 லட்சம் […]

Alleged Police Brutalities Muslims Tamil Nadu

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு அருணா ஜெகதீசன் ஆணையம் பாராட்டு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களின் நலனை விரும்பி சேவையாற்றிய தமுமுகவிற்கு பாராட்டு துன்பத்தைப் பொருட்படுத்தாமல் சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றைப் பாராமல் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் (TMMK) செய்த விலைமதிப்பற்ற சேவை ஆகும். எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் […]

Alleged Police Brutalities Tamil Nadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 17 காவல்துறையினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இறந்துபோன ஜஸ்டினின் உயிரிழப்பை, துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு […]

Hindus Hindutva Lynchings Muslims Terrorism Uttar Pradesh

உ.பி : கும்பலாக வீட்டிற்குள் புகுந்து முஸ்லிம் விவசாயியை அடித்து கொன்ற கொடூரம்!

உ.பி.யில் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்! கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அன்று, இரவு 10:15 மணியளவில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள வினய்பூர் கிராமத்தில் வசிக்கும் தாவூத் அலி தியாகி, தனது வீட்டிற்கு வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தாவூத்தின் மருமகன் நயீம் தியாகி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் அக்ரம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்தனர். திடீரென்று 6,7 பைக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த ஒரு கும்பல், தியாகி மீது தாக்குதல் […]

Crimes against Children Delhi Hindus

டெல்லி: சிவபெருமான் பலியிட சொன்னதாக கூறி 6 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை.!

டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு, லோதி காலனி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகத்தின் கட்டுமான தளத்தில் நடந்தது. காவல் துறையினருக்கு அழைப்பு: கட்டிட கட்டுமான பகுதியில் இருந்து 6 வயது சிறுவனின் கழுத்தை இருவர் அறுத்து கொலை செய்து விட்டதாக டெல்லி காவல்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லோதி காலனியில் ஒரு பிசிஆர் அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே சம்பவ இடத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் […]

Tamil Nadu

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

தமிழகத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12 வரை நடப்பதால் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அக்டோபர் 6 முதல் 8 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி என அறிவிக்கப்பட்டு அக்டோபர் 9 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 […]

thiruma
RSS Tamil Nadu Thol. Thirumavalavan

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடைக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் மனு!

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் : திருமாவளவன் மனு “மத நல்லிணக்கத்தை குலைத்து, பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுவது ஆர்எஸ்எஸ். அதை சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த போது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது. பாஜக விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும். மேலும் நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம்” என […]

Alleged Police Brutalities BJP Hindutva Lynchings Muslims Uttar Pradesh

உபி: ஆடு தனது வீட்டில் மேய்ந்ததற்காக , பாஜக தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகளால் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்தகீம்.!

உ.பி: கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, பதோஹியின் கத்ரா பஜாரின் ரசூலியத் கான் பகுதியில் பாஜக தலைவர் அடங்கிய 21 பேர் கொண்ட கும்பலால் முஸ்தகீம் (55) படுகொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு பலவந்தமாக உடல் அடக்கமும் செய்யப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். எனினும் இது ஊடகங்களில் பெரிய அளவில் செய்தியாக வெளி வரவில்லை. “எங்களிடம் 2, 3 ஆடுகள் உள்ளன. அருகில் உள்ள பாஜக தலைவர் சந்தீப்பின் வீட்டில் புல்லை மேய்ந்து விட்டது. இதில் […]

Hindus Hindutva Lynchings Muslims Uttar Pradesh

உபி: 19 வயது ஷாருக் சுட்டுக்கொலை!

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பராலி கிராமத்தில் ஷாருக் என்ற 19 வயது இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். முசாபர்நகரில் வசிப்பவரும் கூலித் தொழிலாளியுமான ஷாருக் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரும் அவரது நண்பரும் வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, நீங்கள் திருடர்கள் என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கப்பட்டதாக ஷாருக்கின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட தரம்வீர் மற்றும் ஓம்பல் ஆகிய […]

indian christians
Christians Hindutva Minority Punjab Uttar Pradesh

கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்; உச்சநீதிமன்றத்தில் தரவுகளின் அடிப்படையில் மனு !

ஒரு அரசு சாரா நிறுவனத்தின் உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை வரை கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்தல்கள் நடைபெற்றுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ‘பொய்யானவை’ ‘உள்நோக்கம் கொண்டவை’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது. உபியில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: கடந்த ஆகஸ்ட் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஹர்சந்த்பூர் என்ற கிராமத்தில் மூன்று நபர்கள் […]

Hindutva Indian Judiciary Mosques Muslims Uttar Pradesh

உபி : ஜமா பள்ளிவாசல் கோவில் என அங்கு வழிபாடு நடத்த வழக்கு; விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்!

பதாவுன் நகரில் உள்ள ஜமா மஸ்ஜித் ஷம்சி, சிவன் கோயில் என்றும், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்து மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் சனிக்கிழமை தெரிவித்தார் உபி: பதாவுன் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் ஜமா பள்ளிவாசல், கோவிலை இடித்து கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்பான அகில பாரதீய இந்து மகாசபா (ABHM) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்: ஆகஸ்ட் […]

Haryana Islamophobia Muslims

ஹரியானா: உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மதரசா மாணவர் !

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில், காணாமல் போன 11 வயது சிறுவன் நூஹ் நகரில் உள்ள மதரஸாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை மதரஸாவில் இருந்து காணாமல் போன சிறுவன், திங்கட்கிழமை பிரார்த்தனை கூடத்தை ஒட்டியுள்ள பழைய அறையில் இருந்து உடல் அழுகிப்போன நிலையில் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சமீர் என அடையாளம் காணப்பட்ட அந்த சிறுவர், ஷா சௌகா கிராமத்தில் உள்ள தர்கா வாலா மதரஸாவில் தங்கியிருந்தது படித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுவன் கொலை செய்யப்பட்டதாக […]

Dalits Hindus Uttar Pradesh

உபி: தனது பைக்கை தொட்டதால் தலித் சமூக மாணவரை மெட்டல் ராடால் தாக்கிய ஆசிரியர்!

ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மா தன்னை மெட்டல் ராடால் (உலோகத்தாலான ராடு) மற்றும் துடைப்பத்தால் தாக்கி, கழுத்தை நெரித்ததாகவும் பாதிக்கப்பட்ட தலித் சமூக மாணவர் தெரிவித்துள்ளார். ‘பள்ளியின் மற்ற ஊழியர்கள் சிறுவனை மீட்டனர்’ என போலீசார் தெரிவித்தனர். பல்லியா (உத்தரப்பிரதேசம்): தனது மோட்டார் சைக்கிளைத் தொட்டதற்காக, தலித் மாணவர் ஒருவர் வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டு, அவரது ஆசிரியரால் உலோகக் கம்பியால் தாக்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். கிருஷ்ண மோகன் சர்மா என்ற ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். […]