Alleged Police Brutalities Tamil Nadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

17 காவல்துறையினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் இறந்துபோன ஜஸ்டினின் உயிரிழப்பை, துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு இணையாக பாவித்து அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தகுந்த நிவாரணத்தை வழங்கவும், அவரது தாயாருக்கு அரசு பணி வழங்காவும், பலத்த காயமடைந்த காவலர் மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்கவும் ஆணையமானது பரிந்துரைத்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலங்களில் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையமானது பரிந்துரை வழங்கியுள்ளது.