Shahi mosque hindu.mob
Hindus Hindutva Mosques Muslims Telangana

ஹைதராபாத்: குதுப் ஷாஹி மசூதி நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது! இந்து தெய்வ சிலை அகற்றம்!

ஹைதராபாத்: ராய்துர்காமில் உள்ள பழமையான குதுப் ஷாஹி மசூதியின் கூட்டுக் கணக்கெடுப்பு, தெலுங்கானா மாநில வக்ஃப் வாரியம் மற்றும் ரங்கா ரெட்டி மாவட்ட அதிகாரிகளால் புதன்கிழமை மஸ்ஜித் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் AIMIM எம்எல்ஏ கவுசர் மொகிதீன் முன்னிலையில் நடைபெற்றது. ஆவணங்களை சரிபார்த்த பிறகு, சர்ச்சைக்குரிய சர்வே எண் 82 மசூதிக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. பள்ளிவாசல் வளாகத்தில் இந்து தெய்வம்: அதனுடன், குதுப் ஷாஹி மசூதியின் எல்லைச் சுவரைப் புனரமைப்பதற்காக ரூ. 5 லட்சம் […]

Hindus Hindutva Lynchings Muslims Terrorism Uttar Pradesh

உ.பி : கும்பலாக வீட்டிற்குள் புகுந்து முஸ்லிம் விவசாயியை அடித்து கொன்ற கொடூரம்!

உ.பி.யில் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்! கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அன்று, இரவு 10:15 மணியளவில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள வினய்பூர் கிராமத்தில் வசிக்கும் தாவூத் அலி தியாகி, தனது வீட்டிற்கு வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தாவூத்தின் மருமகன் நயீம் தியாகி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் அக்ரம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்தனர். திடீரென்று 6,7 பைக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த ஒரு கும்பல், தியாகி மீது தாக்குதல் […]

Crimes against Children Delhi Hindus

டெல்லி: சிவபெருமான் பலியிட சொன்னதாக கூறி 6 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை.!

டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு, லோதி காலனி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகத்தின் கட்டுமான தளத்தில் நடந்தது. காவல் துறையினருக்கு அழைப்பு: கட்டிட கட்டுமான பகுதியில் இருந்து 6 வயது சிறுவனின் கழுத்தை இருவர் அறுத்து கொலை செய்து விட்டதாக டெல்லி காவல்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லோதி காலனியில் ஒரு பிசிஆர் அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே சம்பவ இடத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் […]

Hindus Hindutva Lynchings Muslims Uttar Pradesh

உபி: 19 வயது ஷாருக் சுட்டுக்கொலை!

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பராலி கிராமத்தில் ஷாருக் என்ற 19 வயது இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். முசாபர்நகரில் வசிப்பவரும் கூலித் தொழிலாளியுமான ஷாருக் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரும் அவரது நண்பரும் வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, நீங்கள் திருடர்கள் என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கப்பட்டதாக ஷாருக்கின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட தரம்வீர் மற்றும் ஓம்பல் ஆகிய […]

Dalits Hindus Uttar Pradesh

உபி: தனது பைக்கை தொட்டதால் தலித் சமூக மாணவரை மெட்டல் ராடால் தாக்கிய ஆசிரியர்!

ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மா தன்னை மெட்டல் ராடால் (உலோகத்தாலான ராடு) மற்றும் துடைப்பத்தால் தாக்கி, கழுத்தை நெரித்ததாகவும் பாதிக்கப்பட்ட தலித் சமூக மாணவர் தெரிவித்துள்ளார். ‘பள்ளியின் மற்ற ஊழியர்கள் சிறுவனை மீட்டனர்’ என போலீசார் தெரிவித்தனர். பல்லியா (உத்தரப்பிரதேசம்): தனது மோட்டார் சைக்கிளைத் தொட்டதற்காக, தலித் மாணவர் ஒருவர் வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டு, அவரது ஆசிரியரால் உலோகக் கம்பியால் தாக்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். கிருஷ்ண மோகன் சர்மா என்ற ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். […]

BJP BJYM Hindus Hindutva Madhya Pradesh

ம.பி: கோவிலுக்குள் ரகளையில் ஈடுபட்டு, தடுப்புகளை வீசியெறிந்த பாஜகவினர் !

உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில், ஆகஸ்டு 10 அன்று, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களுக்கும் , கோவில் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில், பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பிஜேஒய்எம்) தொண்டர்களுக்கும், கோயில் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையே புதன்கிழமை கைகலப்பு ஏற்பட்டது, அதன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இன்று காலை தனது ஆதரவாளர்கள் சிலருடன் வெறுப்பு பேச்சாளராக விமர்சிக்கப்படும் BJYM இன் தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா […]

Discrimination Hindus Hindutva Islamophobia Muslims Uttar Pradesh

உ.பி : பல சமய பிரார்த்தனையில் முஸ்லிம் பிரார்த்தனையும் இணைக்கப்பட்டதை அறிந்து பள்ளிக்கு சீல் வைப்பு !

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அனைத்து மத வழிபாட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமிய பிரார்த்தனைகளையும் இணைத்துள்ளது தொடர்பாக விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா குழுக்களின் புகார் மற்றும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பள்ளியின் இயக்குநர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295A (மத உணர்வுகளை புண்படுத்தல்) மற்றும் மதமாற்ற தடைச் சட்டம் 2021 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கான்பூரில் உள்ள புளோரெட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, இந்துத்துவாவினரின் விஷம பிரச்சாரம் காரணமாக இரண்டு […]

Alleged Upper Caste atrocities Dalits Gujarat Hindus

குஜராத்: தலித் பெண் சமைத்ததால் சாப்பிட மறுக்கும் மாணவர்கள்!

அகமதாபாத்: ஜூன் 16 முதல், கோலி, பர்வாத், தாக்கூர் மற்றும் காத்வி போன்ற ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மோர்பியில் உள்ள ஒரு பள்ளியில் அரசாங்கத்தின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை உட்கொள்ளவில்லை. மாணவர்கள் சாப்பிடாததற்கு காரணம்: இதற்குக் காரணம் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணி ஒரு தலித் சமூக பெண்ணுக்கு வழங்கப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அப்பெண்மணி சமைத்த உணவை சாப்பிடுவதை விரும்பவில்லை என்பதே. பள்ளி அதிகாரிகள் மற்றும் மாவட்ட […]

Fact Check Gyanvapi Mosque Hindus Muslims

மற்ற நந்தி சிலைகளுக்கு மாற்றமாக காசி விஸ்வநாதர் கோவில் நந்தி கியான்வாபி பள்ளியை நோக்கி ?

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி தொடர்பாக நிலவும் சர்ச்சைக்கு மத்தியில், இந்துக் கடவுளான சிவனின் வாகனமான ஒரு நந்தி சிலையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “நந்தி எப்போதும் சிவலிங்கத்தை நோக்கி தனது முகத்தை வைத்திருப்பார், ஆனால் காசி விஸ்வநாதரின் நந்தி கியான்வாபி மசூதியை எதிர் நோக்கி உள்ளது. ஏனெனில் அது முதலில் விஸ்வநாதர் கோயிலாக இருந்தது. நந்தி தனது எஜமானனை (சிவன்) எதிர்பார்த்து வாசலை நோக்கி காத்திருக்கிறார். கியான்வாபி மசூதி உண்மையில் ஒரு இந்து […]

Bihar Hindus Muslims

பீஹார்: உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலைக் கட்ட நிலம் வழங்கிய முஸ்லிம் குடும்பத்தார்!

நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில், பீகாரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பத்தார், மாநிலத்தின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான விராட் ராமாயண் கோவில் கட்டுவதற்காக ரூ.2.5 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய பாட்னாவை தளமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால், நிலத்தை நன்கொடையாக வழங்கிய இஷ்தியாக் அகமது கான், குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் […]

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !
Crimes against Children Hindus Hindutva Lynchings West Bengal

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !

திங்கள்கிழமை பிற்பகல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட மறுத்ததற்காக பாஜக உறுப்பினர் ஒருவர் 10 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புலியாபாராவில் உள்ள தேநீர் கடை வழியாக சிறுவன் சென்று கொண்டிருந்த போது, அக்கடை உரிமையாளர் சிறுவனை தாக்கியுள்ளார். இது குறித்து டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் அண்மையில் தனது தாயை இழந்தவர். நான்காம் வகுப்பு மாணவரான மகாதேவ் சர்மா பல காயங்களுடன் ரானகட் […]

Delhi Fact Check Fake News Hindus

டில்லி: கோயிலில் சிலைகளை சேதம் செய்த நபர் கைது; உண்மையை தெளிவுப்படுத்திய போலீசார் !

மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் நகரில் ஒரு கோயிலை சேதம் செய்ததாக 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் உண்மை நிலவரத்தை சொல்வதற்குள் பாசிச பயங்கரவாதிகள் இதை செய்தது முஸ்லிம்கள் தான் என்ற ரீதியில் பொய் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இரண்டு சிவன் சிலைகள் இடம்பெயர்க்கப்பட்டதாகவும், கற்கள் மற்றும் செங்கற்கள் கோயிலில் பரவலாக கிடந்ததாகவும் கூறி, பாசிம் பூரியில் உள்ள வைஷ்ணோ மாதா கோயில் அர்ச்சகர் ரஞ்சீத் ஃபதக் (47) என்பவரிடமிருந்து சனிக்கிழமை காலை […]

இந்துக் குடும்பங்கள் ஆலயம் கட்ட இடம் அளித்த ஷர்ஜில் இமாமின் குடும்பத்தார்; இன்று இவரை தான் மோடி அரசு கைது செய்து வைத்துள்ளது.!
Activists Arrests Hindus Muslims

இந்துக் குடும்பங்கள் ஆலயம் கட்ட இடம் அளித்த ஷர்ஜில் இமாமின் குடும்பத்தார்; இன்று இவரை தான் மோடி அரசு கைது செய்து வைத்துள்ளது.!

ஷர்ஜில் இமாம். நினைவிருக்கிறதா இவரை ?அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் முடித்துவிட்டு தற்போது இந்திய வரலாறு குறித்த மேலாய்வுக்காக டெல்லி ஜே.என்.யூவில் சேர்ந்துள்ள நிலையில் இன்று டெல்லி போலீசால் – அதாவது மோடி அரசால் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வெளியே வரமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போன்ற பிரச்சினைகளில் நியாயம் வேண்டி எழுதியும் பேசியும் வருகிற நாமும் கூட இவர் மீதான இந்தக் கொடும் நடவடிக்கை குறித்து ஒன்றும் எழுதாமல் போன குற்ற […]

நான் தாக்கப்பட்டபோது பா.ஜ.கவோ, தொலைகாட்சி தொகுப்பாளர்களோ ஏன் கொந்தளிக்கவில்லை?- சுவாமி அக்னிவேஷ் கேள்வி!
Hindus Hindutva Lynchings

நான் தாக்கப்பட்டபோது பா.ஜ.கவோ, தொலைகாட்சி தொகுப்பாளர்களோ ஏன் கொந்தளிக்கவில்லை?- சுவாமி அக்னிவேஷ் கேள்வி!

மஹாராஷ்ட்ரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் சமீபத்தில் கலவரக்கும்பலால் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பா.ஜ.க மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களால் கடுமையாக கண்டித்து கூப்பாடு போடப்பட்டது. கொல்லப்பட்ட மூவரில் இருவர் வாரணாசியில் உள்ள ஒரு அகாராவைச் சேர்ந்த சாதுக்கள் என்பதை மையமாக வைத்து பா.ஜ.க மற்றும் சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களான வலதுசாரி மதவெறியர்கள் இந்த கொலைக்கு மதசாயம் பூசி மதகுரோதத்தை வளர்க்க முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அத்தனை பேரும் சங்பரிவாரால் இந்து […]

டில்லி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்துக்கள் மாபெரும் பேரணி; ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளும் ரத்து !
Delhi Pogrom Hindus Pakistan

டில்லி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்துக்கள் மாபெரும் பேரணி; ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளும் ரத்து !

கராச்சி: கடந்த மாதம் இந்திய தலைநகரில் பாசிஸ்டுகளின் வன்முறை கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தின் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை அணிவகுத்துச் சென்றனர். மேலும் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை (இன்று) ஆரவாரமின்றி மிகவும் அமைதியான முறையில் கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளனர். பாகிஸ்தானின் சிறுபான்மையினர்: 210 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் நாட்டில் மொத்தம் 2 சதவிகிதம் இந்துக்கள் உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் தெற்கு சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர். ஆண்டு தோறும் ஹோலி பண்டிகையின் […]