உபி: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் முஸ்லிம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து பொருட்களை நாசம் செய்த பாசிச கும்பல் !
BJP Islamophobia Minority Muslims Uttar Pradesh

உபி: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் முஸ்லிம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து பொருட்களை நாசம் செய்த பாசிச கும்பல் !

உபி யில் மோடியின் தொகுதியான வாரணாசியில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பாசிச கும்பல் ஒன்று ஒரு முஸ்லீம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து, அவர்களின் வீட்டு பொருட்களையும், ஒரு சிறிய தொழிற்சாலையையும் அடித்து நொறுக்கி, அங்கு வசிக்கும் பெண்களையும் தாக்கி உள்ளனர். வீட்டில் இருந்த பணத்தையும் திருடி சென்றுள்ளனர். காவல்துறையினர் குண்டர்களுடன் பக்கபலமாக இருந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் தாக்கி முஸ்லிம்கள் மீதே வழக்கு பதிவு செய்தனர் என சப்ரங் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறை மற்றும் சட்டத்தை […]

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: யோகி அரசால் கைது செய்யப்பட்டுள்ள சித்திக் கப்பனின் மனைவி வேதனை
Activists Arrests Islamophobia Journalist Muslims Uttar Pradesh

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: சித்திக் கப்பனின் மனைவி வேதனை ..

யுஏபிஏ குற்றம் சாட்டப்பட்டவரும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளருமான சித்திக் கப்பன், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நாளில், அதற்கு முன்பான 24 மணி நேத்தில் அவருக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல் தி க்விண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி 37 வயதான ரைஹானா சித்திக்கிடம் பேசினோம், இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல என்று கூறினார். அவரது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸையும் நாங்கள் அணுகினோம்,இவ்வாறு மீண்டும் […]

Assam Election Commission

90 பேர் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு; தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் !

ஹாஃப்லாங் (அஸ்ஸாம்): அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் 90 வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மொத்தம் 171 வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் கடும் குளறுபடி ஏற்பட்டதை அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். ஏப்ரல் 1 ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற ஹஃப்லாங் தொகுதியில் இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், மாவட்ட தேர்தல் அதிகாரி, 107 (ஏ) கோட்லீர் எல்பி பள்ளியில் உள்ள இவ்வாக்குச் சாவடியின் ஐந்து வாக்கெடுப்பு அதிகாரிகளை […]

பள்ளிவாசல் முன் நின்று வாக்குசேகரிப்பு ; பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு
Actors BJP Tamil Nadu

பள்ளிவாசல் முன் நின்று வாக்குசேகரிப்பு ; பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு !

சென்னை: தேர்தல் நடத்தை சட்டத்தை மீறி வெள்ளிக்கிழமை மசூதி முன் பிரச்சாரம் செய்ததாக நடிகரும் பாஜக வேட்பாளருமான (ஆயிரம் விளக்குகள் தொகுதி) குஷ்பு சுந்தர் மீது கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரச்சார விதிமுறைகளை மீறி நடிகை குஷ்பு பள்ளிவாசலுக்கு முன், அவரும் அவரது ஆதரவாளர்களும் முறையான அனுமதியைப் பெறாமல் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதை கண்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து […]

'பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை' என பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ மகள் பணியிடை நீக்கம்!
Activists BJP Tripura

‘பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை’ என பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ மகள் பணியிடை நீக்கம்!

திரிபுரா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அனிந்திதா பவுமிக். முறையான டெண்டர் மூலம் மருத்துவமனையின் விலை உயர்ந்த உபகரணம் வாங்கப்படவில்லை என அவர் முகநூலில் பதிவிட்ட காரணத்தால் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திரிபுராவின் தெற்கு மாவட்டத்தின் பெலோனியா சப் டிவிஷனைச் சேர்ந்த ஆளும் பாஜக எம்.எல்.ஏ., அருண் சந்திர பவுமிக் என்பவரின் மகள் தான் அனிந்திதா பவுமிக். “திரிபுராவில் 2018 ல் பாரதீய ஜனதா கட்சி அமைக்கப்பட்ட […]

உபி: முசாபர்நகர் கலவர வழக்கில் பாஜக தலைவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு!
BJP Uttar Pradesh

உபி: முசாபர்நகர் கலவர வழக்கில் பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பபெற்றது சிறப்பு நீதிமன்றம் !

உபி பாஜக அமைச்சர் சுரேஷ் ராணா, பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம், வி.எச்.பி தலைவர் சாத்வி பிராச்சி உள்ளிட்ட 12 பாஜக தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முசாபர்நகர் கலவர குற்ற வழக்குகளை வாபஸ் பெற உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள எம்.பி. / எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் 27 அன்று அனுமதித்தது. முக்கிய பாஜக தலைவர்கள் அனைவர் மீதும் ஒரு வழக்கும் கூட இல்லாமல் ‘கிளீன் சிட்’ வழங்கியுள்ளது நீதிமன்றம். அறுபது பேர் கொல்லப்பட்டு, […]

DMK Tamil Nadu

திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன், மகள் வீட்டில் ஐடி ரெய்டு !

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் அவரது மகள் செந்தமரை ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்தில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலகரை என்ற இல்லத்தைத் தவிர, தேனம்பேட்டையில் உள்ள அலுவலக வளாகத்திலும் மேலும் இரண்டு இடங்களிலும் ஐ-டி ரெய்டு நடந்து வருகின்றன. சபரீசன் பல ஆண்டுகளாக ஸ்டாலினின் நெருங்கிய ஆலோசகராக […]

உபி: அம்பேத்கார் சிலை உடைப்பு; போலீசார் வழக்கு பதிவு !
Uttar Pradesh

உபி: அம்பேத்கார் சிலை உடைப்பு; போலீசார் வழக்கு பதிவு !

உபி: உபியில் உள்ள கிராமம் ஒன்றில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில் கண்ட உள்ளூர் தலித் மக்கள், செவ்வாய்க்கிழமை (30-3-21) போராட்டத்தில் ஈடுபட்டனர். குந்தா கிராமத்தில் உள்ள அம்பேத்கார் சிலை திங்கள்கிழமை அதிகாலையில் சில “சமூக விரோத சக்திகளால்” சேதம் செய்யப்பட்டதாக பில்தாரா சாலையில் உள்ள சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் (எஸ்.டி.எம்), சர்வேஷ் யாதவ் தெரிவித்தார். எஸ்.டி.எம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர், விரைவில் ஒரு புதிய சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தனர். […]

உபி: வீட்டின் முன்னே ஹோலி கொண்டாட அனுமதி மறுத்த 60 வயது முதியவர் அடித்து கொலை !
Uttar Pradesh

உபி: வீட்டின் முன்னே ஹோலி கொண்டாட அனுமதி மறுத்த 60 வயது முதியவர் அடித்து கொலை !

உபி: மெவதி டோலா பகுதியில், தங்கள் வீட்டிற்கு முன் ஹோலி கொண்டாட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த 60 வயது முதியவர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இத்தாக்குதல் சம்பவத்தில் அவரது குடும்பத்தினர் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். காலை 10 மணியளவில் போதையில் தள்ளாடி கொண்டே ஹோலி கொண்டாடி கொண்டிருந்த ஒரு கூட்டம் , அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கட்டைகள் மற்றும் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு […]

BJP Kerala Minority

கண்ணூர்: மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் வாகனம் மீது பாஜகவினர் தாக்குதல்; போலீசார் வழக்கு பதிவு !

கண்ணூர்: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் வாகனம் மீது பாஜகவினர் தாக்கியதாக பிலதாரா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த அப்பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மலையாள ஊடகமான மாத்ரபூமி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவ்வழக்கு தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் : இந்த சம்பவம் (நேற்று) திங்கள்கிழமை பயன்னூர் அருகே உள்ள எடாட் […]

உபி: நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிபதியை எட்டி மிதித்து, அறைந்த கொடூரம் !
Indian Judiciary Uttar Pradesh

உபி: நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிபதியை எட்டி மிதித்து, அறைந்த கொடூரம் !

உன்னாவ் பார் அசோசியேஷன் உறுப்பினர்களால் கடந்த வியாழக்கிழமை தாக்கப்பட்டதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் கூறியதையடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமை தாங்கி கொண்டிருந்த நீதிமன்ற அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தபட்டுள்ளது. நாட்டையே உலுக்கி இருக்க வேண்டிய இந்த சம்பவம் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. நீதிபதிக்கே இந்த நிலை: கடந்த மார்ச் 25 அன்று, உன்னாவோவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (சிறப்பு நீதிமன்றம், போக்ஸோ சட்டம்), பிரஹ்லாத் டோண்டன் […]

BJP Tamil Nadu Telangana

பாஜக வின் தமிழக தேர்தல் அறிக்கையை தெலுங்கானா விவசாயிகள் எரித்து போராட்டம் !

தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலையில் தேர்தல் நடக்கவுள்ள தமிழ் நாட்டில் மஞ்சள் வாரியம் அமைப்போம் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், தெலுங்கானாவின் மஞ்சள் விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். நிஜாமாபாத் மாவட்டத்தின் ஆர்மூர் நகரில், மஞ்சள் விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையின் நகல்களை அவர்கள் எரித்தனர்.பாஜக வின் நிஜாமாபாத் மக்களவை […]

BJP Crimes Against Women Uttar Pradesh

பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் விடுவிப்பு !

உபி: சட்ட கல்லூரி மாணவி தாக்கல் செய்த கற்பழிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில், முன்னாள் பாரதீய ஜனதா தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தை மார்ச் 26 தேதி, வெள்ளிக்கிழமையன்று குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்த் கட்டுப்பாட்டில் இயங்கும் எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் மாணவியாக இருந்த அவர்,கடந்த 2019 ஆகஸ்டில் சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பாஜக […]

Hindutva Muslims Uttar Pradesh

உபி: பெயர் கேட்டு விட்டு என்னை தாக்க ஆரம்பித்து விட்டனர் – முஸ்லீம் இளைஞர் குற்றச்சாட்டு!

காஜியாபாத்தின் தஸ்னா கோவிலில் ஒரு சிறு முஸ்லீம் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற ஒரு சில நாட்களில் இதுபோன்ற மற்றொரு சம்பவம் உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில், 18 வயது சிறுவன் முஸ்லீம் இளைஞர் ஒருவர் எட்டாவாவில் உள்ள ஒரு கோவிலில் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். எட்டாவா மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள பிதாம்பர மாதா கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. […]

மகாராஷ்டிரா: பாஜக/ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக இருந்து பணியாற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரிடம் கோரிக்கை !
BJP Congress Maharashtra

மகாராஷ்டிரா: பாஜக/ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக இருந்து பணியாற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரிடம் கோரிக்கை !

மகாராஷ்டிராவில் முந்தைய தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் போது பாரதீய ஜனதா கட்சி அல்லது ஆர்எஸ்எஸின் அனுதாபிகளாக இருந்து பணியாற்றிய அரசாங்க அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் முதலமைச்சர் (முதல்வர்) உத்தவ் தாக்கரேவை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை வைத்தனர். மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் பொலிஸ் இடமாற்றங்களில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்தனர். […]