பிலிபிட்: உபி யில் 16 வயது சிறுவனைப் பிடித்து, ஆசனவாயில் வழியாக உயர் சக்தி கொண்ட காற்று அமுக்கி மூலம் காற்றை உந்தி, அவரது உள் உறுப்புகளை சேதப்படுத்தி உள்ளனர் மூன்று கயவர்கள். பரேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிர் இழந்துள்ளார். சிறுவன் ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்ததையடுத்து, 22 முதல் 26 வயது இடையிலான மூன்று நபர்கள் மீது பிலிபிட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் […]
Author: NewsCap.in Staff
₹1.15 லச்சம் வாரா கடன் தள்ளுபடி – மத்திய இணை நிதியமைச்சர் அறிவிப்பு!
நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.15 ரூபாய் லச்சம் கோடி, வாரா கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மோடி அரசு, மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி, வாரா கடன்கள், நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து முழு ஒதுக்கீடு செய்யப்பட்டவை உட்பட, சம்பந்தப்பட்ட வங்கியின் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து அகற்றப்பட்டதாக நிதிஇணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். முன்னதாக 2018-2019 நிதியாண்டில் 2.36 லட்சம் கோடி ரூபாய், […]
உபியில் கூட்டு பலாத்கார குற்றம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சித்திக்குக்கு சிறையில் கடும் டார்ச்சர்- பிபிசி ரிப்போர்ட் !
உபி ஹத்ராஸில் உள்ள புல்கரி கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், உயர் சாதியை சேர்ந்த நான்கு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் காயங்களுடன் உயிர் இழந்தார். பெண்ணின் மரணம் மற்றும் நள்ளிரவில் அவரது குடும்பத்தின் அனுமதியின்றி யோகியின் காவல்துறையினர் கட்டாய உடல் தகனம் செய்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக அமைந்தது. குடும்பத்தினரையும் ஊடகங்களையும் இறுதி சடங்கிலிருந்து விலக்கி வைத்தனர்,காவல்துறையினர். இது குறித்து செய்தி வெளியிட ஆர்மபத்தில் கோதி மீடியாக்கள் மறுத்தன, […]
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தே.மு.தி.க !
தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது தே.மு.தி.க. இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில். “அதிமுக உடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் தே.மு.தி.க. கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. எனவே தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒருமித்த முடிவாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்துள்ளோம்.” என கூறப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என தே.மு.தி.க துணை […]
மே.வங்க தேர்தலை 8 கட்டங்களில் நடத்துவதை எதிர்த்து தொடரபட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கமும், நடுநிலையாளர்களும் மாநில தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்த முடிவெடுத்துள்ளது, தேர்தலில் பாஜக வுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டினர். அரசியலமைப்பின் 14 வது பிரிவு மற்றும் 21 வது பிரிவை மீறியுள்ளதால், மாநிலத்தில் எட்டு கட்ட தேர்தல் நடத்துவதைத் தடுத்து […]
UAPA – அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்..
ஒரு சுருக்கமான பின்னணி… இந்திய சுதந்திரம் உலகளாவிய பல மாற்றங்களின் பின்னணியில் உருவானது. ஐ.நா அவை உருவாக்கம், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ஆகிய பின்னணியில் நமது அரசியல் சட்ட அவையில் விவாதங்கள் நடந்து பல நல்ல கூறுகளுடன் இந்திய அரசியல் சட்டம் 1951 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.. அப்போதே நமது ஆட்சியாளர்கள் அன்றைய பொதுவுடைமைப் புரட்சிகளையும் அதன் இந்திய எதிரொலிகளையும் சுட்டிக் காட்டி பிரிட்டிஷ் அரசு காலத்திய தடுப்புக்காவல் சட்டம் ஒன்று இருண்ட்து என்றாலும் பெரிய […]
ஆஸ்திரேலியா: சீக்கியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாசிஸ்டுகள் !
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இந்திய சீக்கியர்கள் குழு ஒன்றின் மீது கடந்த பிப்ரவரி 28 ஞாயிற்றுக்கிழமை , அடையாளம் தெரியாத சில பாசிஸ்டுகளால் தாக்குதலில் ஈடுபட்டனர். மேற்கு சிட்னியில் உள்ள ஹாரிஸ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் காரை நிறுத்தி, பேஸ்பால் மட்டைகள், சுத்தியல் மற்றும் கட்டைகளை கொண்டு அடித்து நொறுக்கினர்,இச்சமயம் சீக்கியர்கள் காரின் உள்ளே அமர்ந்திருந்தனர். இதனால் குறிப்பிடத்தக்க காயங்கள் ஏதுமின்றி தப்பினர், எனினும் பின்னர் அவர்கள் துரத்தப்பட்டு மீண்டும் […]
ஏர் பிரான்ஸ் விமானத்தில் மோடி, மோடி என கோஷமிட்டு வன்முறை செயல்களில் ஈடுபட்ட நபர் கைது !
பாரிஸிலிருந்து புதுடெல்லிக்குச் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. (1500 ஜிஎம்டி) பல்கேரிய அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்திய குடிமகனான இந்த பயணி, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அத்துமீறலில் ஈடுபட்டார், மற்ற பயணிகளுடன் சண்டையிட்டார், ஒரு விமான பணிப்பெண்ணைத் தாக்கி, காக்பிட்டின் கதவைத் தட்ட ஆரம்பித்தார் என்று தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி இவிலோ ஏஞ்சலோவ் கூறிகிறார். மோடி, மோடி […]
கர்நாடகா: பாஜக அமைச்சர் மீது பாலியல் புகார் அளித்தவர், புகாரை வாபஸ் பெற்றார்
முன்னாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி மீது வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணுடன் பாலியல் சல்லாபத்தில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி ஞாயிற்றுக்கிழமை, தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். இவரது புகாரை தொடர்ந்து கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவியது.ரமேஷின் சகோதரரும் பாஜக எம்எல்ஏவுமானபாலச்சந்திர ஜர்கிஹோலி இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி இருந்தார். பாஜக தலைவர் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகும் பல வீடியோக்கள் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன, அடுத்த […]
பெண்ணுக்கு பாலியல் தொல்லை,பாஜக தலைவர் நிதின் கைது- மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தகவல்
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள முர்பாத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுரிமை குழு உறுப்பினர் (கார்ப்பரேட்டர்) நிதின் தெல்வானே, பெண் உறுப்பினர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமையால் கைது செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வியாழக்கிழமை தெரிவித்தார். நள்ளிரவு 12.40 மணியளவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதற்காக பாஜக தலைவர் டெல்வானே கைது செய்யப்பட்டார். “ஐபிசி பிரிவு 452 (வீட்டு மீறல்), 354 (துன்புறுத்தல்), 354 ஏ […]
இடதுசாரிகளின் பேரணி கூட்டத்தை மோடிக்கு கூடிய கூட்டம் என பதிவிட்ட தமிழக பாஜக ட்விட்டர் பக்கம் !
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பேரணியில் கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை எடுத்து பிரதமர் மோடியின் பேரணியில் கூடிய பிரமாண்ட கூட்டம் என தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, பிறகு சிக்கிக்கொண்டு அந்த பதிவை நீக்கி உள்ளது பாஜக. இடதுசாரிகள் கடந்த பிப்ரவரி 2019 இல் நடத்திய பேரணியின் புகைப்படத்தை தான் தமிழக பாஜக சுட்டு தங்கள் மோடிக்கு கூடிய கூட்டம் என பொய்யாக சித்தரித்து உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்ற கூட்டம் கூடியதே […]
மே.வங்கம்: மோடியின் பேரணியில் கலந்து கொள்வதற்கு 3 ரயில்களை 60 லச்சத்திற்கு புக்கிங் செய்த பாஜக !
இன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் (படைப்பிரிவு-Brigade Rally) பேரணியில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்களை கொண்டு வந்து சேர்த்திட மூன்று யில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அலிபூர்துர், மால்டா மற்றும் ஹரிச்சந்திரபூரிலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட இந்த மூன்று ரயில்களை வாடகைக்கு எடுக்க பாஜக ரூ .60 லட்சத்திற்கு மேல் செலவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அலிபுர்துர் மற்றும் மால்டாவிலிருந்து சிறப்பு […]
மே.வங்கம்: நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பாஜக தொண்டர்கள் காயம்; ஒருவர் பலி – போலீசார் தகவல் !
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் உள்ள கோசாபாவில் வெள்ளிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒரு பாஜக உறுப்பினர் உயிர் இழந்தார், மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென வெடித்ததில் பாஜக தொண்டர்கள் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெற்கு 24 பர்கானாவில் உள்ள கேனிங் […]
குறைகளை செவிசாய்க்காத அதிகாரிகளை மூங்கில் குச்சிகளை கொண்டு அடியுங்கள்- பாஜக மத்திய அமைச்சர் ஆலோசனை ..
மக்கள் குறைகளை செவிசாய்காத அதிகாரிகளை பொதுமக்கள் “மூங்கில் குச்சிகளைக் கொண்டு அடிக்குமாறு” அறிவுறுத்தி உள்ளார் பாஜக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். சனிக்கிழமை பீகார், கோடவந்த்பூரில் ஒரு வேளாண் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் உரையாற்றியபோது இந்த கருத்தை தெரிவித்தார். மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை இலாகாக்களின் அமைச்சரான அவர் பொது மக்களிடமிருந்து அடிக்கடி புகார்கள் வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும்பாலும் புகார்களுக்கு சிறிதும் கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். “நான் […]
கர்நாடகா: பாஜக வின் 6 அமைச்சர்கள் தங்களின் நன்மதிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு..
வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட குற்றச்சாட்டில் கர்நாடக பாஜக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது, 6 கேபினட் அமைச்சர்கள் தங்கள் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு செய்தியையும் ஊடகங்கள் ஒளிபரப்பவோ, அச்சிடவோ கூடாது என கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இந்த அமைச்சர்கள் சார்பாக சில தனிநபர்களால் தடை உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மீடியாகளில் […]