Alleged Police Brutalities BJP Hindutva Lynchings Muslims Uttar Pradesh

உபி: ஆடு தனது வீட்டில் மேய்ந்ததற்காக , பாஜக தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகளால் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்தகீம்.!

உ.பி: கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, பதோஹியின் கத்ரா பஜாரின் ரசூலியத் கான் பகுதியில் பாஜக தலைவர் அடங்கிய 21 பேர் கொண்ட கும்பலால் முஸ்தகீம் (55) படுகொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு பலவந்தமாக உடல் அடக்கமும் செய்யப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். எனினும் இது ஊடகங்களில் பெரிய அளவில் செய்தியாக வெளி வரவில்லை. “எங்களிடம் 2, 3 ஆடுகள் உள்ளன. அருகில் உள்ள பாஜக தலைவர் சந்தீப்பின் வீட்டில் புல்லை மேய்ந்து விட்டது. இதில் […]

Hindus Hindutva Lynchings Muslims Uttar Pradesh

உபி: 19 வயது ஷாருக் சுட்டுக்கொலை!

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பராலி கிராமத்தில் ஷாருக் என்ற 19 வயது இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். முசாபர்நகரில் வசிப்பவரும் கூலித் தொழிலாளியுமான ஷாருக் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரும் அவரது நண்பரும் வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, நீங்கள் திருடர்கள் என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கப்பட்டதாக ஷாருக்கின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட தரம்வீர் மற்றும் ஓம்பல் ஆகிய […]

indian christians
Christians Hindutva Minority Punjab Uttar Pradesh

கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்; உச்சநீதிமன்றத்தில் தரவுகளின் அடிப்படையில் மனு !

ஒரு அரசு சாரா நிறுவனத்தின் உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை வரை கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்தல்கள் நடைபெற்றுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ‘பொய்யானவை’ ‘உள்நோக்கம் கொண்டவை’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது. உபியில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: கடந்த ஆகஸ்ட் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஹர்சந்த்பூர் என்ற கிராமத்தில் மூன்று நபர்கள் […]

Hindutva Indian Judiciary Mosques Muslims Uttar Pradesh

உபி : ஜமா பள்ளிவாசல் கோவில் என அங்கு வழிபாடு நடத்த வழக்கு; விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்!

பதாவுன் நகரில் உள்ள ஜமா மஸ்ஜித் ஷம்சி, சிவன் கோயில் என்றும், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்து மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் சனிக்கிழமை தெரிவித்தார் உபி: பதாவுன் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் ஜமா பள்ளிவாசல், கோவிலை இடித்து கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்பான அகில பாரதீய இந்து மகாசபா (ABHM) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்: ஆகஸ்ட் […]

BJP Corruption Education Madhya Pradesh

ம.பி: முதல்வரின் கண்காணிப்பின் கீழ் மாபெரும் ஊழல்; அம்பலப்படுத்திய மாநிலத்தின் சொந்த கணக்காளர் ஜெனரலின் அறிக்கை!

தணிக்கை அறிக்கையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 9,000 பள்ளி செல்லாத சிறுமிகள் இருப்பதாகவும், ஆனால் 36 லட்சம் என ஜோடிக்கப்பட்டதும் அம்பலம் ஆகியுள்ளது. மத்தியப் பிரதேச அரசின் ரேஷன் திட்டத்தில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான ஊழல் நடந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் இலவச ரேஷன் வினியோகத் திட்டமான, டேக் ஹோம் ரேஷன் (THR) திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பதை கணக்காளர் ஜெனரலின் அறிக்கை அம்பலப்படுதி உள்ளது. இந்த திட்டத்தில் […]

Haryana Islamophobia Muslims

ஹரியானா: உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மதரசா மாணவர் !

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில், காணாமல் போன 11 வயது சிறுவன் நூஹ் நகரில் உள்ள மதரஸாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை மதரஸாவில் இருந்து காணாமல் போன சிறுவன், திங்கட்கிழமை பிரார்த்தனை கூடத்தை ஒட்டியுள்ள பழைய அறையில் இருந்து உடல் அழுகிப்போன நிலையில் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சமீர் என அடையாளம் காணப்பட்ட அந்த சிறுவர், ஷா சௌகா கிராமத்தில் உள்ள தர்கா வாலா மதரஸாவில் தங்கியிருந்தது படித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுவன் கொலை செய்யப்பட்டதாக […]

Dalits Hindus Uttar Pradesh

உபி: தனது பைக்கை தொட்டதால் தலித் சமூக மாணவரை மெட்டல் ராடால் தாக்கிய ஆசிரியர்!

ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மா தன்னை மெட்டல் ராடால் (உலோகத்தாலான ராடு) மற்றும் துடைப்பத்தால் தாக்கி, கழுத்தை நெரித்ததாகவும் பாதிக்கப்பட்ட தலித் சமூக மாணவர் தெரிவித்துள்ளார். ‘பள்ளியின் மற்ற ஊழியர்கள் சிறுவனை மீட்டனர்’ என போலீசார் தெரிவித்தனர். பல்லியா (உத்தரப்பிரதேசம்): தனது மோட்டார் சைக்கிளைத் தொட்டதற்காக, தலித் மாணவர் ஒருவர் வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டு, அவரது ஆசிரியரால் உலோகக் கம்பியால் தாக்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். கிருஷ்ண மோகன் சர்மா என்ற ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். […]

Hindutva RSS Saffronization Terrorism

நாடு முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம் ! – அனைத்தையும் போட்டுடைத்த 25 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஊழியர்!

மகாராஷ்டிரா மாநிலம் நான்டேட் பகுதியை தளமாகக் கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயன்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினர்களின் வீட்டில் 16 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் அந்த அமைப்பின் பல மூத்த இந்துதுவ தலைவர்கள் நேரடியாக தொடர்ப்புடையவர்கள் என்று கூறி ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் ஊழியர் ஒருவர் சிபிஐ நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். விண்ணப்பம் தாக்கல் செய்துள்ள யஷ்வந்த் ஷிண்டே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருந்தவர். மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத் […]

பெங்களூரு சாமராஜ்பேட்டை இத்கா மைதானம்
Hindutva Indian Judiciary Karnataka Mosques Muslims

இரவு 11:30 மணிக்கு கூடிய நீதிமன்றம்; ஈத்காவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி !

அஞ்சுமன்-இ-இஸ்லாம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி நடத்தலாம் என அனுமதி அளித்தது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு: ஹுப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் பந்தல் அமைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. நீதிபதி அசோக் எஸ் கினகி தலைமையிலான பெஞ்ச் இரவு 11.30 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஹுப்பள்ளி மைதானம் தொடர்பாக ‘சொத்து தகராறு ஏதும் இல்லை” […]

Brahmins Uttarakhand

உத்தராகண்ட் : தனது குடும்பத்தை சேர்ந்த ஐவரை கழுத்தை அறுத்து கொன்ற அர்ச்சகர் கைது!

பாஜக ஆளும் உத்தராகண்ட், டேராடூனின் ராணி போகாரியில் திங்கள்கிழமை காலை கத்தியால் கழுத்தை அறுத்து தனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கொடூரமாக கொலை செய்ததற்காக 47 வயதான அர்ச்சகர் ஒருவரை, கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அர்ச்சகரின் தாய், மனைவி மற்றும் மூன்று மகள்களும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர், உத்தரபிரதேசத்தின் பண்டாவைச் சேர்ந்தவர், மகேஷ் குமார் திவாரி, பிராமண சமூகத்தை சேர்ந்த இவர், டேராடூனில் கடந்த 7-8 ஆண்டுகளாக ராணி போகாரியில் […]

பெங்களூரு சாமராஜ்பேட்டை இத்கா மைதானம்
Hindutva Indian Judiciary Karnataka Mosques Muslims

ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதித்த உயர்நீதிமன்றம்!

புதுடெல்லி: பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: முஸ்லீம் அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அப்பகுதியில் தேவையற்ற மத பதற்றம் உருவாக்கப்படுவதாக சிபல் தெரிவித்தார். சுருக்கமான சமர்ப்பிப்புகளைக் கேட்ட உச்ச […]

Tamil Nadu

மின் கட்டணத்தை உயர்த்த நீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மின் கட்டண உயர்வு குறித்த இறுதி உத்தரவு பிறப்பிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்திள்ளது. இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தொடரும். அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதார்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

தலித்
Cow vigilantes Dalits Hindutva Karnataka

கர்நாடகா: தலித் சமூகத்தை சேர்ந்தவரை தாக்கிய பஜ்ரங் தள இந்துத்துவாவினர்; தலித் அமைப்பினர் போராட்டம்!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்திற்குட்பட்ட சக்லேஷ்பூரில் திங்கள்கிழமை, பயங்கரவாத அமைப்பாக விமர்சிக்கப்படும் பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், சொந்த மாட்டை கொண்டு சென்று கொண்டிருந்த தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தாக்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் வெடித்தன. ஹலசுலிகே கிராம பஞ்சாயத்தின் முன்னாள் துணைத் தலைவரான மஞ்சுநாத், பஜ்ரங் தள் இயக்கத்தினரால் கொடூரமாக ஆக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றிய தகவல் பரவியதையடுத்து, பல தலித் அமைப்புகள் மாவட்டத்தில் போராட்டம் நடத்தின. தலித் அமைப்புகள் போராட்டம்: போராட்டம் வலிமை அடைந்ததை […]

BJP Hate Speech Muslims Telangana

தெலுங்கானா: பாஜக எம்எல்ஏ டி.ராஜா நபிகளார் குறித்து இழிவாக பேசிய நிலையில், வெறுப்புப் பேச்சுக்களை நாங்கள் ஆதரிப்பதில்லை என மாநில பாஜக விளக்கம் !

ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ ராஜா சிங் கூறிய இழிவான கருத்துக்களில் இருந்து தெலுங்கானா மாநில பாஜக விலகியுள்ளது. “எங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது, இதற்கு மாறாக யாரும் பேசியிருந்தால், நாங்கள் அதைக் கவனிப்போம்” என்று பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார். கோஷாமஹாலைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஜெய் ஸ்ரீ ராம் சேனலில் யூடியூப்பில், திங்கள்கிழமை இரவு வெளியிட்ட காணொளியில் நபிகளார் குறித்து இழிவான […]

BJP Hate Speech Telangana

தெலங்கானா: நபிகளாரை இழிவுபடுத்தி பேசிய பாஜக எம்.எல்.எ, டி.ராஜா கைது !

ஹைதராபாத் : முகமது நபியை அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தொடர் வெறுப்பு பேச்சுகளுக்கு பெயர்போன பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை ஐதராபாத் போலீஸார் சற்று முன் கைது செய்தனர். நபிகளாரை இழிவாக பேசியதற்காக பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கிற்கு எதிராக ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்தன, மேலும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உள்ளூர் காவல்துறையினர் மற்றும் கமிஷனர் அதிரடிப்படை குழு மங்கள்ஹாட்டில் உள்ள எம்.எல்.ஏ […]