Delhi Hindutva

டெல்லி: பாசிஸ்டுகள் பள்ளிவாசல் எரிப்பதை படம்பிடித்த தமிழக ஊடகவியலாளர் மீது கொலைவெறி தாக்குதல் ..

டெல்லியில் பாசிச மத வெறியர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை கத்தி கொண்டு தெருக்களின் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வரும் வேலையில் நாட்டில் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களோ டெல்லியில் நடந்து கொண்டுள்ள சம்பவங்களை முற்றிலுமாக திட்டமிட்டு மறைத்து வருகின்றன.

இந்நிலையில் கேமரா வைத்து பாசிச கும்பல் அரங்கேற்றும் வன்முறைகளை படம்பிடிப்பவர்களை தேடி தேடி அடித்து நொறுக்குகிறது பாசிச மத வெறி கும்பல்.

பாசிச மதவெறி கும்பல் பள்ளிவாசலை எரித்து கொண்டிருப்பதை வீடியோ எடுத்து கொண்டிருந்த சவ்ரப், தமிழககத்தை சேர்ந்த NDTV ஊடகவியலாளர் அரவிந்த் (மேலுள்ள படத்தில் நடுவில் உள்ளவர்) மீது பாசிச மத வெறியர்கள் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். தங்களிடம் உள்ள வீடியோக்களை நீக்குமாறும் அவர்கள் மிரட்டி உள்ளனர்.

பாசிஸ்டுகளால் தாக்கப்பட்ட மற்றொரு ஊடகவியலாளர் ஆகாஷ்

எனினும் தமிழககத்தை சேர்ந்த அரவிந்த் அதை ஒப்புக்கொள்ளவில்லை எனவே அவரது பற்களை உடைத்துள்ளனர்.

சவ்ரப் என்ற ஊடகவியலாளர் தனது ருத்ராச்சமாலையை காட்டி தான் ஒரு இந்து என்று அடையாளம் காட்டி கொண்டு அரவிந்தையும் பாசிச பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றியுள்ளார்.

இதனிடையே அமித் ஷா பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.