Hindutva Tamil Nadu

கோவை: பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த இந்து முன்னணியினர் கைது!

கோவையில் கடந்த 18ம் தேதி செல்வபுரம் பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் அதை இரண்டு பேர் மறைந்து நின்று கற்களை கொண்டு தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய கோயிலை இடிக்க சம்பவ இடத்திற்கு வந்த கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு எதிராக இந்து முன்னானியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செல்வபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை அகற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது […]

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !
Crimes against Children Hindus Hindutva Lynchings West Bengal

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !

திங்கள்கிழமை பிற்பகல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட மறுத்ததற்காக பாஜக உறுப்பினர் ஒருவர் 10 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புலியாபாராவில் உள்ள தேநீர் கடை வழியாக சிறுவன் சென்று கொண்டிருந்த போது, அக்கடை உரிமையாளர் சிறுவனை தாக்கியுள்ளார். இது குறித்து டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் அண்மையில் தனது தாயை இழந்தவர். நான்காம் வகுப்பு மாணவரான மகாதேவ் சர்மா பல காயங்களுடன் ரானகட் […]

Alleged Police Brutalities Hindutva Tamil Nadu

கோவை: போலீசார் வாகனத்தை சேதப்படுத்தியதால் இந்து முன்னணி உறுப்பினர் கைது!

கோவை: போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் செல்வபுரம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சேர்ந்த உறுப்பினர் ஒருவரை கைது செய்தனர். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய கோயிலை இடிக்க சம்பவ இடத்திற்கு வந்த கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு எதிராக இந்து முன்னானியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செல்வபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காவல்துறையினர் போராட்டக்காரர்களை அகற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். […]

Gujarat

12 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்த மோடி ஆட்சி காலத்தில் துவங்கபட்ட அரசு மருத்துவ கல்லூரிகள் எத்தனை தெரியுமா?

12 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்த மோடி அங்கு அவரது ஆட்சி காலத்தில் துவங்கிய அரசு மருத்துவ கல்லூரிகள் எத்தனை தெரியுமா? – ஒன்றும் கூட இல்லை. குஜராத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகள் மொத்தம் ஆறுதான். சில வலைத்தளங்கள் 31 என்று காண்பிக்கும். உண்மை என்னவென்றால் மீதமிருக்கும் கல்லூரிகளில் அரசு நிர்வாகம் மட்டுமே இருக்கும். அரசு நிதி ஒதுக்காது. அவை சுயநிதி கல்லூரிகள் போல இயங்கும். எடுத்துக்காட்டாக AMCMET மருத்துவக்கல்லூரியை துவங்கியது அகமதாபாத் மாநகராட்சியின் ட்ரஸ்ட். […]

Minority West Bengal

’15 ஆண்டுகளாக பாஜக வுக்கு ஆதரவு அளித்து வருகிறேன்..’கூர்க்கா சமூகத்திற்கு அவர் அளித்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றவில்லை..

பாரதீய ஜனதா கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், 2014 முதல் கூர்க்கா சமூகத்துக்காக எதுவும் செய்யவில்லை என்றும் கோர்கலான்ட் ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) தலைவர் பிமல் குருங் சனிக்கிழமை குற்றம் சாட்டினார். மேலும் வங்காளத்தில் பிஜேபிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும், எனவே மாநிலத்தில் பாஜக அரசாங்கம் அமைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். தற்போது நடைபெற்று வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாய்ப்புகள் குறித்து கேட்க பட்டபோது, “அவர்களுக்கு (பாஜக) வங்காளத்தில் […]

Corona Virus Maharashtra

‘கும்பமேளாவிலிருந்து திரும்புபவர்கள் கொரோனாவை ‘பிரசாதமாக’ விநியோகிப்பார்கள்..’ மும்பை மேயர் கிஷோரி கருத்து ..

கும்பமேளாவில் பக்தர்களுக்கும், சாதுக்களுக்கு தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும், அதாவது அடையாளம் என்ற வகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கும்ப மேளாவில் இருந்து திரும்புபவர்கள் தத்தம் மாநில மக்களுக்கு கொரோனாவை தான் பிரசாதமாக வழங்குவார்கள் என கருத்து தெரிவித்துள்ளார். கும்பமேளாவிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்குத் திரும்புபவர்கள் கொரோனாவை ‘பிரசாதமாக’ விநியோகிப்பார்கள் “என்று பிஎம்சி மேயர் […]

Islamophobia Lynchings Muslims West Bengal

“ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட மறுத்ததற்காக பள்ளிவாசல் பராமரிப்பாளர் மீது தாக்குதல்!

மேற்கு வங்கம்: “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட மறுத்ததற்காக புதன்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டதாக ஹூக்லியின் சின்சுராவில் உள்ள பள்ளிவாசலின் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து தி டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. நடந்த சம்பவம்: சின்சுராவில் உள்ள சக்பஜாரில் வசிக்கும் முகமது சுஃபியுதீன் (54 வயதானவர்), புதன்கிழமை அதிகாலை 3.45 மணியளவில், தனது வீட்டிலிருந்து மசூதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து, “ஜெய் […]

Gujarat

குஜராத்: கொரோனா வைரஸை அழிக்க அரசு மருத்துவமனையில் யாகம் ..

சூரத்: கோவிட் -19 நோயாளிகளைக் கொண்டுவரும் ஆம்புலன்ஸின் இடைவிடாத சைரன்களுக்கு இடையே, தெற்கு குஜராத்தின் மிகப்பெரிய கோவிட் -19 மருத்துவமனையான அரசு நடத்தும் புதிய சிவில் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை ஆரிய சமாஜ் உறுப்பினர்கள் கொரோனா வைரஸை ‘ஒழிக்க’ ஒலிபெருக்கியின் மூலம் யாகம் நடத்தனர். மருத்துவமனை வளாகத்தில் யாகத்தை நடத்த உயர் என்.சி.எச் நிர்வாகத்தால் அழைக்கப்பட்டதாக ஆர்யா சமாஜ் உறுப்பினர்கள் கூறினார். முந்தைய நாளில் ராம்நாத் கெலா மற்றும் குருக்ஷேத்ரா தகனங்களில் யாகங்களை நடத்தினோம், அதே யாகம் […]

மதுராவில் உள்ள ஜமா பள்ளிவாசல் கிருஷ்ணர் பிறந்த இடம், தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு!
Hindutva Indian Judiciary Islamophobia Muslims Uttar Pradesh

ஆக்ராவில் உள்ள ஜமா பள்ளிவாசல் கிருஷ்ணர் பிறந்த இடம், தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு!

இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரின் சிலைகள் பள்ளிவாசலின் கீழ் புதையுண்டுள்ளதா என்பதை கண்டறிய ஆக்ராவில் உள்ள ஜஹானாரா மசூதி (ஜமா மஸ்ஜித் ஆக்ரா என்று பிரபலமாக அறியப்படுகிறது) உள்ள நிலத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) கதிரியக்க பரிசோதனை செய்யக் கோரி மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிலைகளை பள்ளிவாசலுக்கு கீழ் அவுரங்கசீப் புதைத்தாராம்: முகலாய பேரரசர் அவுரங்கசீப், மதுரா ஜன்மஸ்தன் கோயிலை இடித்துத் தள்ளிய (?) பின்னர், கிருஷ்ணரின் சிலைகளை மதுராவிலிருந்து ஆக்ராவுக்கு எடுத்து […]

Delhi Fact Check Fake News Hindus

டில்லி: கோயிலில் சிலைகளை சேதம் செய்த நபர் கைது; உண்மையை தெளிவுப்படுத்திய போலீசார் !

மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் நகரில் ஒரு கோயிலை சேதம் செய்ததாக 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் உண்மை நிலவரத்தை சொல்வதற்குள் பாசிச பயங்கரவாதிகள் இதை செய்தது முஸ்லிம்கள் தான் என்ற ரீதியில் பொய் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இரண்டு சிவன் சிலைகள் இடம்பெயர்க்கப்பட்டதாகவும், கற்கள் மற்றும் செங்கற்கள் கோயிலில் பரவலாக கிடந்ததாகவும் கூறி, பாசிம் பூரியில் உள்ள வைஷ்ணோ மாதா கோயில் அர்ச்சகர் ரஞ்சீத் ஃபதக் (47) என்பவரிடமிருந்து சனிக்கிழமை காலை […]

narsing saraswati
Hate Speech Islamophobia Muslims Uttar Pradesh

நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடியவர்கள் மீது உபி போலீசார் வழக்கு பதிவு !

உபி: சமூக வலைதளங்களில் பயங்கரவாதியாக விமர்சிக்கப்படும் நரசிங்கானந்த் சரஸ்வதி நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறாக பேசியதற்கு ஜனநாயக ரீதியாக, அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்த100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது உத்தரபிரதேசத்தின் பிலிபிட் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக பிரசித்திமிக்க உருது செய்தித்தாள் இன்குலாப் தெரிவித்துள்ளது. விதி மீறல் என குற்றச்சாட்டு: போராட்டக்காரர்கள் கொரோனா கால சமூக இடைவெளியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் மேலும் பஞ்சாயத்து தேர்தல் காரணமாக இப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும் […]

உபி: கியான்வாபி பள்ளிவாசலில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு; செலவை அரசு ஏற்குமாறு தீர்ப்பு.
Indian Judiciary Muslims Uttar Pradesh

உபி: கியான்வாபி பள்ளிவாசலில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு; செலவை அரசே ஏற்குமாறும் உத்தரவு!

உபி காஷி விஸ்வநாத் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி பள்ளிவாசலில்இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) ஆராய்ச்சி செய்திட வாரணாசி சிவில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2000 ஆண்டு பழமையான காஷி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை 1669 ஆம் ஆண்டில் கியான்யாபி மசூதியைக் கட்டுவதற்காக முகலாய பேரரசர் அவுரங்கசீப் இடித்ததாக எந்த ஒரு ஆதாரமுமின்றி இந்துத்துவாவினர் கூறி வருகின்றனர், இந்நிலையில் கியான்வாபி மசூதி அமைந்துள்ள மீட்டெடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. “… மேற்கண்ட கியான்வாபி நிலத்தின் நடுவில், […]

Election Commission Maharashtra Shiva sena

‘நாட்டில் தேர்தல் ஆணையம் செத்துவிட்டது அல்லது பாஜக அரசாங்கத்தின் சார்பாக செயல்படுகிறது’ – சிவசேனா கடும் விமர்சனம் !

சிவசேனா தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது 2 குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது. அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் ஈ.வி.எம் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் அஸ்ஸாம் அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரமாக தேர்தல் ஆணையம் குறைத்து அறிவித்தது ஆகிய இரண்டு விஷயங்களை சாம்னா எழுப்பியுள்ளது. சாம்னா தலையங்கத்தில், தேர்தல் ஆணையம் நாட்டில் இறந்துவிட்டது அல்லது […]

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உபி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு; 120 தேச துரோக வழக்கில் 94 வழக்குகள் ரத்து!
Indian Judiciary Uttar Pradesh

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உபி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு; 120 தேச துரோக வழக்கில் 94 வழக்குகள் ரத்து!

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (என்.எஸ்.ஏ) உபி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்ததில், ஜனவரி 2018 முதல் 2020 டிசம்பர் வரையிலான காலத்தில் பதியப்பட்ட 120 வழக்குகளில் 94 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ளது. மொத்த வழக்குகளில் 41 தேச துரோக வழக்குகள், பசுவதை தொடர்பாகப் பதியப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்குகள் அனைத்தும் சிறுபான்மையினர் மீது பதியப்பட்டிருப்பதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. […]

gujart model
BJP Gujarat

குஜராத் : குப்பை லாரியில் வெண்டிலேட்டர்கள் எடுத்து செல்லப்பட்ட அவலம் !

குஜராத்தில் கோவிட் -19 தாறுமாறாக பரவி வரும் நிலையில், பற்றாக்குறையையின் காரணத்தால் 34 வென்டிலேட்டர்கள் குப்பை லாரி ஒன்றில் சூரத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. திங்களன்று முதல் முறையாக 3,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை அதிகமாகி உள்ளது. குப்பை லாரியில் வெண்டிலேட்டர் : மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் (இயந்திரத்தின் காற்றுவாரி) பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு குஜராத் அரசு 34 வென்டிலேட்டர்களை வல்சாட்டில் இருந்து சூரத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டது. […]