bajrang dal
Gyanvapi Mosque Hindutva

‘கியான்வாபி பள்ளியில் தொழும் முஸ்லிம்களின் தலையை வெட்டுவோம்’ : பஜ்ரங் தள் உறுப்பினர் மிரட்டல்!

கியான்வாபி மசூதியில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களை கொலை செய்யப்போவதாக பஜ்ரங் தள் தொண்டர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இரண்டு நாட்களாக இணையத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் பண்டிட் ரவி சோங்கர் என்ற வலதுசாரி நபர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வன்முறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். “இந்த மக்கள் (முஸ்லீம்கள்) பல ஆண்டுகளாக தங்கள் அழுக்கு கைகளையும் கால்களையும் சுத்தம் செய்ய எங்கள் சிவலிங்கத்தைப் பயன்படுத்தியது வருத்தமளிக்கிறது. அவர்களின் தலைகளை வெட்டுவோம்” […]

Hindutva Muslims Uttar Pradesh

உபி: 20 நாட்கள் ஆகியும் கடத்தப்பட்ட சையதாவை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் உபி போலீஸ்.. !

உபி: கடந்த ஏப்ரல் 25 அன்று, உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகரில் உள்ள எட்வாவில் ரம்ஜான் ஸஹர் உணவு உண்ணும் நேரத்தில் தனது வீட்டைச் சுற்றியுள்ள வயலுக்குச் சென்றபோது, சோனி (24) என்ற சையதா காதுன், பிரேந்திர குமார் மற்றும் அவனது நண்பர்களால் கடத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது. காலை 6 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடும்பத்தினரை போனில் அழைத்து, முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டாம் என்று மிரட்டியதாகவும், சம்பவம் குறித்து கிராம மக்களுக்கு […]

gyanvapi
Indian Judiciary Muslims Uttar Pradesh

உபி: சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது என கூறி கியான்வாபி பள்ளிவசாலின் ஒளு செய்யும் பகுதிக்கு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்!

உபி: கியான்வாபி மசூதியின் ஒரு பகுதியை சீல் வைக்குமாறு கடந்த திங்களன்று வாரணாசி நீதிமன்றம், மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அங்கு வீடியோ சர்வேயின் போது ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என கூறி தற்போது அந்த பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வீடியோ சர்வே எடுக்க வேண்டுமென கட்டாயமாக்கியதை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் மூன்று நாள் வீடியோ ஆய்வு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஒரு நாள் […]

Kashmir Muslims

சிங்கப்பூர்: காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தடை !

சிங்கப்பூர்: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து இந்துக்கள் மட்டுமே கொல்லப்பட்டதை போல பொய்யான சித்தரிப்புடன் எடுக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தி மொழித் திரைப்படமான தி காஷ்மீர் பைல்ஸ் சிங்கப்பூரின் திரைப்பட வகைப்பாடு வழிகாட்டுதல்களுக்கு “அப்பாற்பட்டதாக” இருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் என சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் (MCCY) மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் வெளியான இத்திரைப்படம் , 1989 முதல் […]

தரம் சன்சாத்
Hate Speech Muslims Uttarakhand

உத்தராகண்டில் இந்துமத ‘தரம் சன்சாத்’ நிகழ்வுகளில் தொடர் முஸ்லிம் வெறுப்பு பேச்சுக்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் !

பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரையில் `தர்ம சன்சத்’ என்ற இந்துமத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசப்பட்டது, அதனை தொடர்ந்து கடந்த வாரம் ரூர்கீ என்ற ஊரில் முஸ்லிம்கள் ஊரை விட்டே விரட்டி அடிக்கப்பட்டனர், அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. எனினும் இதை குறித்து எந்த ஒரு மீடியாவும் பெரிதாக செய்தி வெளியிடவில்லை. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் நாளை […]

ஹிஜாப் வழக்கு
Hijab Row Karnataka

ஹிஜாப் விவகாரம் :’இரண்டு நாட்கள் காத்திருங்க..’ – தலைமை நீதிபதி!

ஹிஜாப் வழக்கு மேல்முறையீடுகளை இரண்டு நாட்களில் விசாரணைக்கு எடுத்து கொள்ள இந்திய தலைமை நீதிபதி திங்கள்கிழமை ஒப்புக்கொண்டார். “நான் விசாரணைக்கு பட்டியலிடுகிறேன். இரண்டு நாட்கள் காத்திருங்கள்” என ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசரமாக பட்டியலிட வேண்டும் என்று கோரிய மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோராவிடம் தலைமை நீதிபதி ரமணா கூறினார். 05.02.2022 தேதியிட்ட அரசாணையை நிலைநிறுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய மார்ச் 15 தேதியிட்ட தீர்ப்புக்கு […]

lakshadweep students லட்சத்தீவு மாணவிகள் சீருடை
Lakshadweep Muslims Students

லட்சத்தீவு :அரைக் கை சட்டையும் பாவாடையுமாக மாறும் பள்ளி சீருடை ..

லட்சத்தீவில் உள்ள மக்கள் கடந்த வாரம் புதிய பள்ளி சீருடை வழங்குவதற்கான டெண்டர் ஆவணம் சமூக ஊடகங்களில் பரவியதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஆவணத்தின்படி, ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டு வரையிலான பெண் மாணவர்களுக்கு, சல்வார் உடைகள் ( stitched divided skirts ) தைக்கப்பட்ட பிரிக்கப்பட்ட பாவாடைகளாகவும், முழுக் கை சட்டைகள் அரைக் கைகளாகவும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள், உயர் வகுப்புகளில் படிக்கும் பெண் மாணவிகள் அடக்கமாக உடை அணியப் பழகியதால் என்ன நடக்கிறது என்று […]

International News Israel Palestine

பாலஸ்தீனம்: அல் அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேலிய பொலிசார் சோதனை நடத்தினர், அடுத்தடுத்த நிகழ்ந்த வன்முறையில் குறைந்தது 152 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிகாலை தொழுகைக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மசூதியில் கூடியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடியும் முன்பே இஸ்ரேலிய போலீசார் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்ததாக பள்ளியை நிர்வகிக்கும் இஸ்லாமிய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய போலீசார் தாக்குதல்: ஆன்லைனில் பரவும் வீடியோக்கள் இஸ்ரேலிய போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ஸ்டன் […]

Bihar Hindus Muslims

பீஹார்: உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலைக் கட்ட நிலம் வழங்கிய முஸ்லிம் குடும்பத்தார்!

நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில், பீகாரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பத்தார், மாநிலத்தின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான விராட் ராமாயண் கோவில் கட்டுவதற்காக ரூ.2.5 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய பாட்னாவை தளமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால், நிலத்தை நன்கொடையாக வழங்கிய இஷ்தியாக் அகமது கான், குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் […]

Hijab Row Karnataka

கர்நாடகா: ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயமில்லை என கூறி பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்தது நீதிமன்றம்!

ஹிஜாப் அணிவதற்கான தடையை எதிர்த்துப் போராடிய மாணவர்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடையை எதிர்த்து ஐந்து மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமில்லை என மூன்று பேர் அடங்கிய நீதிமன்ற பென்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘பள்ளி சீருடை அணிவதற்கான கட்டுப்பாடு, மாணவர்கள் எதிர்க்க முடியாத நியாயமான கட்டுப்பாடு’ என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு முன்னதாக, மாநில […]

hijab karnataka students
Hijab Row Islamophobia Muslims Students

கர்நாடகா: ஹிஜாப் அணியும் மாணவிகளின் பெயர், விலாசம், தொலைபேசி எண்ணை வெளியிட்ட கல்லூரி..

ஆலியா அசதி பிப்ரவரி 9 புதன்கிழமை அன்று நாள் முழுவதும் ராங் நம்பர் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. கர்நாடகாவின் உடுப்பியில் சலசலக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் தொலைபேசி எண்கள், பெற்றோரின் பெயர்கள் மற்றும் வீட்டு முகவரி உட்பட தனது தனிப்பட்ட விவரங்கள் பகிரப்பட்டதை 17 வயது சிறுமி சில மணிநேரங்களில் உணர்ந்தார். கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தொடரும் போராட்டங்களில் முன்னணியில் இருந்த உடுப்பியின் அரசுப் பெண்களுக்கான அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆறு முஸ்லிம் மாணவர்களில் ஆலியா […]

Muslim Man, Family Attacked By Mob In Kolar
Hindutva Islamophobia Karnataka Lynchings Minority Muslims

கர்நாடகா: புர்காவை கழற்ற சொல்லி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மதவெறி கும்பல்!

சனிக்கிழமையன்று பாஜக ஆளும் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் மதவெறி கும்பல் ஒன்று ஆறு முஸ்லிம் ஆண்கள் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். அருகில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் காரை ஒரு மதவெறி கும்பல் தடுத்து நிறுத்தி, வாகனத்தின் உள் இருந்த பெண்களிடம் “புர்காவைக் கழற்றுமாறு” கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது, இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்புக்கு வழிவகுத்தது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஃப்ஐஆர்: தாக்குதல் நடத்தியவர்கள் […]

உபி: பாபர் பள்ளிவாசலுக்கு பிறகு மீண்டும் ஒரு பள்ளிவாசல் இடிப்பு; நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பள்ளிவாசல் இடிப்பு !!
Babri Masjid Hindutva Minority Muslims Uttar Pradesh

உபி: பாபர் பள்ளிவாசலுக்கு பிறகு மீண்டும் ஒரு பள்ளிவாசல் இடிப்பு; நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பள்ளிவாசல் இடிப்பு !!

மாநில உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உத்தரபிரதேசத்தின் உள்ளூராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல் ஒன்றை இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ள சம்பவம் நாட்டில் எந்த பரபரப்பையும் ஏற்ப்படுத்த வில்லை. 1992 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக இந்துத்துவா வன்முறையாளர்களால் இடிக்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் நிகழ்வுக்கு பிறகு இது போன்ற ஒரு நிகழ்வை பாஜக மாநில அரசே முன்னின்று சட்டவிரோதமாக தற்போது அரங்கேற்றி உள்ளது. இது குறித்து நாம் செய்தி வெளியிடும் இந்த கணம் வரை இந்தியாவில் உள்ள […]

New India Pakistan

இந்தியாவுக்கு உதவுங்கள் என ட்ரெண்ட் செய்து வரும் பாகிஸ்தான் மக்கள்; உதவிக்கரம் நீட்டும் பாகிஸ்தான்..

புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ முன்வந்தள்ள பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட மனிதாபிமான அமைப்பு எடி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பைசல் எடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். எடி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தனது கடிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் துணை ஊழியர்களை உள்ளடக்கிய குழுவுடன் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி கோரி எழுதி உள்ளார். பிரதமர் மோடிக்கு […]

Corona Virus Indian Economy

டில்லி: லாக்டவுன் உள்ள நிலையிலும் புதிய பாராளுமன்றத்திற்கான கட்டுமான பணிகள் தொடரும் ..

தில்லி அரசாங்கம் திங்களன்று அறிவித்த லாக்டவுன் மத்தியிலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடரும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள பாராளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள இந்த கட்டிடம் நவம்பர் 2022 க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை லாக்டவுனின் போது தில்லி அரசு கட்டுமான பணிகளை தடை செய்திருந்தாலும், […]