Modi Thol. Thirumavalavan

மோடியின் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர சொல்வதா ? – திருமா கடும் தாக்கு!

16ஆம் தேதி பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வானொலியில் உரையாற்றுகிறார் அதனால் விடுமுறை நாளாக இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வரவேண்டும் என இப்போது மாற்றி அறிவித்திருக்கிறார்கள். இது மாணவர்களின் சுதந்திரத்தை பறிக்கக்கூடியதாக  இருக்கிறது. 

மாணவர்கள் இல்லங்களில் இருந்தவாறே பிரதமரின் உரையைக் கேட்க வேண்டும் என அரசு கூறலாம். 

பாரதிய ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிற அரசாக தமிழக அரசு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

என விசிக தலைவரும் , எம்பியான தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துளளார்.