CAA

சி.ஏ.ஏ.வை எதிர்த்து அம்பேத்கர் பேரரான பிரகாஷ் டில்லியில் மாபெரும் பேரணி அறிவிப்பு !

மோடி அரசின் சி.ஏ.ஏ.வை எதிர்த்து வருகிற மார்ச் 4 ம் தேதி டில்லியில் பேரணி அணிவகுப்பு நடத்த அம்பேத்கரின் பேரரான பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்துள்ளார். சி.ஏ.ஏ.வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசாங்கம் விற்கக்கூடாது என்றும் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் பேரணி நடத்த உள்ளார் அவர்.

‘நாட்டையும், அரசியலமைப்பையும்’ காப்பாற்றுவதே இந்த பேரணியின் நோக்கம் என பிரகாஷ் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் இந்த பேரணி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஒரு லட்சம் பேர்:

இந்த அணிவகுப்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அம்பேத்கர் இயக்கங்களும் சேர உள்ளன. இந்த பேரணி ஜந்தர் மந்தர் வரை செல்லும். இந்த அணிவகுப்பில் ஒரு லட்சம் பேர் சேருவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ” என்று சமூக ஆர்வலர் பீனா பாலிகல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனவரி மாதம், மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி சி.ஏ.ஏ. மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.