Lynchings Political Figures

“கேள்வி கேட்பதும் அறிவுரை கூறுவதும் தேச துரோகமா?” -மஜக தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் கும்பல் வன்முறை தாக்குதலுக்கு தடுக்க கோரி  இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோதிக்குக் கடிதம் எழுதினர்.

தற்போது அதன் பயனாக  மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்னா சென்,அனுராக் காஷ்யப் என கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது தேச விரோத சட்டம் பாய்ந்துள்ளது. இதனை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மஜக பொது செயலாளர் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“நாடெங்கிலும் நடக்கும் கும்பல் படுகொலைகளையும், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக நடைபெறும் அச்சுறுத்தல்களையும் சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது , உ.பி. மாநிலத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டின் மீதாள கவலையில், கலைஞர்கள், படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி நியாயமான சில கேள்விகளை எழுப்பி, அறிவுரைககைளயும் எழுதி பிரதமருக்கு சுட்டிக்காட்டியிருப்பது எந்த வகையில் தேசத்துரோகமாகும்?

பிரதமருக்கு கடிதம் எழுதி, நாட்டின் நிலையை சுட்டிக் காட்டுவதே குற்றம் எனில், நாடு எதை நோக்கி செல்கிறது என்ற கவலை எழுகிறது.

கருத்துரிமை என்பது குடிமக்களில் அடிப்படை உரிமையாகும்.

ஒரு ஜனநாயக நாட்டில், மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கிடும் போக்கினை அனுமதிக்க கூடாது.

எனவே பீஹார் .மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

மாற்று கருத்துகளையும், ஆரோக்கியமான எதிர் விமர்சனங்களையும் சகித்துக் கொண்டு இயங்குவதே உண்மையான ஐனநாயகம் என்பதை மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் அழுத்தமாக சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
05.10.19

என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது