BJP

பா.ஜ.க. உள்ளூர் தலைவர் உள்பட 5 பேர் கொலை!

மஹராஷ்டிராவின் ஜல்காவன் மாவட்டத்தில் நேற்றிரறவு (6-10-19) பா.ஜ.க. உள்ளூர் தலைவர் ரவீந்திர பாவ் கராத்(55) மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டு துப்பாக்கிகள், கத்தி போன்றவற்றை கொண்டு பாஜக தலைவர் வீட்டினுள் புகுந்த  3 நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.ரவீந்திராவை தவிர கொல்லப்பட்டவர்கள்  அவரது சகோதரர் சுனில் (56), மகன்கள் பிரேம்சாகர் (26) , ரோஹித் (25) மற்றும் கஜரே என்ற மற்றொரு  நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொலையில் ஈடுபட்ட மூவரும் காவல் நிலையத்தில் தாமாக முன் வந்து சரணடைந்து உள்ளனர்.

கொலை குறித்த காரணத்தை போலீசார் விசாரணை செய்து வருகின்றார்.மேலும் கொலையாளிகள் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளதால் இந்த பழி சிறுபான்மை சமூகத்தவர் மீது சுமத்தப்பட வாய்ப்பில்லாமல் போனது. தேர்தல் நெருங்கிவரும் வேலையில் பாஜக தலைவர் கொல்லப்பட்டுள்ளது அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Image Credit:Youtube