Intellectual Politicians Just In

‘குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்குது. சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி, தமிழ் அப்படி இல்ல..’ – பகீர் கிளப்பிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்..

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 166-வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மரியாதை செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்ககின் கேள்விக்கு பதில் அளித்த அவர் “சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி. ஆனால் தமிழ் மொழி தமிழர்களால் மட்டுமே பேசப்படும் மொழி எனவே தமிழை விடவும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக” அவர் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகைக்காக குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சேரி பகுதிகள் சுவர் எழுப்பி மறைக்கப்படுகிறதே என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாஜக தலைவர் இல. கணேசன், குஜராத்தில் காங்கிரஸ் அரசுதான் நடைபெறுகிறது.

எனவே, அதைப்பற்றி அம்மாநில அரசிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார். இந்த முறை பாஜக ஆட்சி அமைக்க தவறி விட்டது, அடுத்த முறை குஜராத்தில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என அவர் கூறிய பதிலால் அனைவரும் அதிர்ச்சியுற்றனர்.

குஜராத்தில் குஜராத்தில் முதலமைச்சர் விஜய்ரூபானி தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதாக அவர் கூறியுள்ள அவரது பேச்சு கேலிக்கூத்துக்கு ஆளாகியுள்ளது.