Delhi

போலீசாரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் …

கடந்த நவம்பர் 2ம் தேதி டில்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பார்க்கிங் விஷயமாக எழுந்த சச்சரவு மோதலாக வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே (பி.எச்.கியூ) போலீசார் இன்று (5-11-19) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (4-11-19) இது குறித்து கருத்து தெரிவித்த ஐபிஎஸ் போலீஸ் கூட்டமைப்பு சங்கம் நாடு முழுவதும் உள்ள போலீசார் வக்கீல்களால் தாக்கப்பட்ட போலீசாருடன் ஒன்றுபட்டு நிற்பதாக தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாக மோதலின் போது கூடுதல் போலீஸ் கமிஷனர் (வடக்கு), இரண்டு ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள் (எஸ்.எச்.ஓ) மற்றும் எட்டு வழக்கறிஞர்கள் உட்பட மொத்தம் 20 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாரும் வழக்கறிஞர்களும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Read More