Article 370 Kashmir

காஷ்மீர்! – ‘பெருநாள் தினத்தில் கூட புத்தாடை இல்லாமல் சிறுவர்கள்’-காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.. பாகம் -2

பாகம் 1 ஐ வாசிக்க ..

கீழே உள்ளது பாகம் 1 ன் தொடர்ச்சி …

சற்று விரிவாக சொல்ல முடியுமா ?

இரண்டு விஷயங்களை சொல்கிறேன். .

ஒரு வீடியோ 11 வயது சிறுவனுடையது. கைது செய்யப்பட்டிருந்த அவர் பெருநாளிற்கு ஒரு நாள் முன்பு தான் விடுவிக்கப்பட்டார். அச்சிறுவன் தன்னை விட சிரியவர்களை கூட அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார்.

மற்றொன்று… ஒரு காஷ்மீரி குடும்பத்தை கொண்ட வீடியோ. அவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதால், அவர்களை நாங்கள் அடையாளப்படுத்தவில்லை.அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு வாலிபரை நடுநிசியில் சட்ட விரோதமாக கைது செய்து சென்றுள்னர். இதை தொடர்ந்து குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு சென்றனர். ‘ஆனால் எங்கள் கைகளில் ஒன்றுமில்லை’ என்று கூறி போலீசார் கை விரித்து விடுகின்றனர். வாலிபர் கைது செய்யப்பட்டதற்கான அதிகாரபூர்வ ஆதாரம்/ ஆவணம் அவர்களிடம் இல்லை. நாளை அந்த வாலிபருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அல்லது திரும்ப வராமல் இருந்தாலும் நம்மிடம் அதை குறித்து கேட்க எந்த ஆதாரமும் இல்லை. இப்படி பேசும் குடும்பத்தினரின் வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.

நீங்கள் சொல்லும் இந்த கைது நடவடிக்கை போலீசாரால் நடக்கிறதா? அல்லது சி.ஆர்.பி.எஃப் வினராலா ? 

எங்களுக்கு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இதில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் என இரு தரப்பினரும் உள்ளனர் . இதுகுறித்து  தட்டி கேட்க நாங்கள் காவல் நிலையங்களுக்கு செல்லாததற்கு காரணம் மக்கள் எங்களிடத்தில் அங்கு செல்ல வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு கொண்டதுதான். இது சம்பந்தமாக அவர்கள் இரண்டு மனநிலைகளில் உள்ளனர். யாரேனும் தங்களுக்கு உதவ மாட்டார்களா என்ற சிந்தனை இருக்கும் அதேவேளையில் இவ்வாறு எடுக்கும் முயற்சிகள் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களின் நிலையை மேலும் மோசமாக்கிவிடும் என்ற அச்சமும் கொண்டுள்ளனர்.

“கைது செய்யப்பட்டவர்கள் பாதுகாப்புடன் திரும்ப வருவார்கள் என்று நாங்கள் நம்பிக்கைக்கு எதிராகவே நம்பிக்கையை கொண்டுள்ளோம். எனினும் தற்போதைக்கு இது குறித்து நீங்கள்  எவரிடத்திலும் கேட்க வேண்டாம் ” என்று குடும்பத்தினர் கேட்டு கொண்டனர் .கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று கூட தெரியாமல் இவர்கள் இருக்கிறார்கள். சிலர் காவல் நிலையங்களில் இருக்கலாம் என்றும் வேறு சிலர் ராணுவ முகாம்களில் இருக்கலாம் என்றும் சந்தேகப் பேச்சைத்தான் பேசுகின்றனர். சட்டவிரோதமாக இவ்வாறு போலீஸ் அல்லது இராணுவம் ஒருவரை அடைத்து வைப்பது குற்றம் என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

ஆனால் காஷ்மீர் பொருத்தவரையில் கொத்து கொத்தாக கொல்லப் பட்டவர்களின் சமாதிகள், கடுங்காவளின் போது கொலை செய்யப்பட்டவர்கள், கைதுக்கு பின் தொலைந்து போனவர்கள் என ஒரு நீண்ட வரலாறே உள்ளது. இது இங்கு வாடிக்கையான விஷயம்.

சௌராவில் நடைபெற்ற  போராட்டத்திற்கு வருவோம். அங்குள்ள மக்களிடம் உங்களால் தொடர்பு கொள்ள முடிந்ததா ?

எங்களால் சௌரா பகுதிக்கு  செல்ல முடியவில்லை .காரணம் போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. எனினும் நாங்கள் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரிசிங் மருத்துவமனைக்கு சென்றோம் அங்கு இரண்டு நபர்கள் பெல்லத் குண்டுகளால் கடுமையான முறையில் கண்கள் , முகம் கைகள் என உடல் முழுவதும் காயங்கள் கொண்ட நிலையில் இருந்தனர்.இவர்கள் மீதான தாக்குதல் நேற்றுமுன்தினம் சௌராவில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் போது தான் என்று தெரிந்து கொண்டோம்.

கௌராவில்  உள்ள மருத்துவமனையில் இன்னும் அதிகமான மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு செல்ல நாங்கள் எவ்வளவு முயற்சித்தும் ராணுவத்தினர் எங்களை செல்ல அனுமதிக்கவே இல்லை.
வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் துறை துணை ராணுவத்தினர் எண்ணிக்கை இந்திய மீடியாக்களில் வெளிவந்த  அளவை விட பல.. பல.. பல.. மடங்கு அதிகமாக உள்ளனர் என்பது தான் எங்கள் கருத்து. ஒவ்வொரு காஷ்மீருக்கும் 4 சி.ஆர்.பி.எஃப்துணை இராணுவப் படையினர் உள்ளனர். காஷ்மீர் பகுதி முழுக்க சி.ஆர்.பி.எஃப் பரவி காணப்படுகின்றனர். காஷ்மீரில் எந்த ஒரு வீதியிலும் எந்த ஒரு வீட்டிற்கு முன்பும் சி.ஆர்.பி.எஃப் படையினரை காணாமல் இருக்க முடியாது. இது மிகவும் கொடுமையானது.

அப்படியானால் உங்கள் கள நிலவரப்படி சௌராவில் நடைபெற்றது மிகப்பெரும் போராட்டமா?

ஆம்.அது மிகப் பெரும் போராட்டம் என்பது ம உறுதி. அதை தொடர்ந்தும் போராட்டங்கள் நடைபெற்றன. மறுநாள் நாங்கள் சௌராவை நோக்கி பயணித்த பொழுது போலீசார் எங்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் எங்களை தடுத்த நேரத்தில் எங்களால் பல வாலிபர்களை காணமுடிந்தது. அவர்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்தி கட்டுப்படுத்த முடியாமல் சிஆர்பிஎப் படையினர் திணறினர். எங்களிடம் இதற்கான புகைப்படங்கள் உள்ளன. அங்குள்ள மக்கள் மிகவும் கோபத்திலும் ஏமாற்றத்திலும் உள்ளனர். இதற்கான சாட்சியங்கள் எங்களிடத்தில் காணொளி யாக பதிவு செய்து வைத்துள்ளோம்.

அவர்கள் , ‘நாங்கள் கைதிகளைப் போலவே நடத்த படுகிறோம். நாங்கள் அடிமைகளைப் போலவே நடத்த படுகிறோம் ‘ என்று கூறினர். 

எங்கு சென்றாலும் இதே வாசகத்தை தான் எங்களால் கேட்க முடிந்தது. நீங்கள்.. ” எங்கள் வீட்டை சிறைச் சாலையாக மாற்றி உள்ளீர்கள். எங்கள் கிராமங்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் சிறைச்சாலைகளாக மாற்றி உள்ளீர்கள். பெருநாள் அன்றும் மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. அருகாமையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் வாழ்த்தி கொள்ள முடியவில்லை.” என்று கூறினர். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பெரிய வருத்தமும், கவலையும் அவர்கள் பேச்சில் தெரிந்தது.

மக்கள் தங்கள் எதிர்ப்பை ஜனநாயகபூர்வமாக அமைதியான முறையில் வெளிப்படுத்த நீங்கள் அனுமதிப்பதில்லை. கடுமையான ஊரடங்கு உத்தரவு ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தங்கள் எதிர்ப்பை எப்படி வெளிப்படுத்துவார்கள்? அதனால் தான் மக்களின் அனைத்து உணர்வுகளையும் அடக்கப்படும் போது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுகின்றன…

எனினும் இப்படிப்பட்ட கடுமையான ஊரடங்கு உத்தரவின் போதும் கூட.. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று உயிர் மீது அக்கறையற்ற ஒரு சிலர் மட்டும் வீதிக்கு வருகின்றனர்.. ‘உங்களால் ஆனதை நீங்கள் செய்து கொள்ளுங்கள்! ‘என்று சொல்லும் இப்படிப்பட்டவர்களையும் காண முடிந்தது. ஆனால் இப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைவே!

இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த நாடுகின்றனர். அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கவும், தங்கள்  கருத்துக்களை தெரிவிக்கவும் விரும்புகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமானால் நான் நிச்சயமாக கூறுகிறேன்..   மக்கள் கூட்டம் கூட்டமாக ஸ்ரீநகர் மற்றும் வேறு இடங்களிலும்  போராட்டத்திற்கு முன் வருவார்கள். ஆனால் அது நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

அப்படியானால் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமானால்  வன்முறை கலந்த போராட்டங்கள் நடைபெறுமா ? 

அப்படியானால் அவர்கள் பொய் சொல்லக்கூடாது.சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின் காரணத்தினால் காஷ்மீர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.. அதை மிகவும் வரவேற்கிறார்கள்.. அங்கு  நிலைமை சீராக உள்ளது .. என்பன போன்ற பொய்களை பேசக்கூடாது.

காஷ்மீர் மக்கள் 370 நீக்கம் செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சியில் உள்ளனர் என்று “கோதி மீடியாக்களின்” பொய் பிரச்சாரம் ...

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை ஒவ்வொரு  காஷ்மீரியின் விருப்பத்திற்கும்   மாறாக தான்  நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். அதனால்தான் நாங்கள் அங்கு உள்ளவர்களை சிறைபிடித்து வைத்துள்ளோம், அவர்களை பேச விடாமல் தடுத்து வைத்துள்ளோம் . ஆக்கிரமித்து உள்ளோம் என்று உண்மையை சொல்லி விட வேண்டும்.

காஷ்மீரி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று இந்திய அரசாங்கம் பொய் சொல்லக்கூடாது இங்கு யாரும் மகிழ்ச்சியுடன் இல்லை இங்கே ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டத்தில் உள்ளார்கள்.

பெருநாள் வரும் வேலையை தேர்ந்தெடுத்து இவ்வாறு செய்தது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக மக்கள் காண்கிறார்கள் . “எங்களுக்கு இருப்பது இரு பண்டிகை தினங்கள் மட்டுமே” . அதில் ஒன்றை முழுவதுமாக கெடுத்து விட்டார்கள். எங்களால் எந்த ஒரு இடத்திலும் மக்களின் கொண்டாட்டத்தை காணமுடியவில்லை. 7 அல்லது 8 வயதிருக்கும் மேற்பட்ட எந்த குழந்தையும் புத்தாடை அணிந்திருக்கவில்லை.

தொடரும் ….