Crimes Against Women Rape Uttar Pradesh

உபி : ரேஷன் பொருட்களை விநியோகிக்க சென்றவர், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

உத்திர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட ரேஷன் கடையில் பணிபுரியும் ஒருவன், 30 வயதான திருமணமான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை, கடந்த புதன் கிழமையன்று உபி பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதில் தான் ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க சென்றதாகவும், அப்போது ரேஷன் கடையில் இருந்தவர் நான் வீட்டிற்கே வந்து உங்களுக்கு பொருட்களை தருகிறேன் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என கூறியதாகவும்.

பிறகு வீட்டிற்கு வந்த ரேஷன் கடை ஊழியர் தான் வீட்டில் தனியாக உள்ளதை அறிந்துகொண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஷாம்லி மாவட்ட சூப்பிரண்டு வினீத் ஜெய்ஸ்வால்
தெரிவித்தார்.

லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் பஞ்சாபில் வர முடியாத நிலையில் உள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.