Islamophobia Lynchings Uttar Pradesh

சந்தேகித்தின் பெயரால் அழைத்து செல்லப்பட்ட ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்திய போலீஸ் ! -அதிர வைக்கும் சம்பவம்

உபி மாநில பஹ்ரைச் (Bahraich) நகரில் குற்றச்சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அழைத்து சென்ற (SOG) போலீஸார் ஜமீல் அஹமதை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்தப்பட்டு கடுமையான சித்திரவதை செய்துள்ளனர்.இதை ஜூலை 22 ஆம் தேதி அபய் சிங் ரத்தோர் என்ற ஊடகவியலாளர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.இந்த செய்தி நாம் அறிந்தவரை வேறு எந்த ஊடகத்திலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

https://twitter.com/Abhay_journo/status/1153289526262919171

தற்போது KGMU மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.இவரின் தாய் நீதி வேண்டி அழுகும் காட்சி நெஞ்சை பிளக்க செயகிறது