Hindutva Uttar Pradesh

உபி மாநிலத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது!

உபி மாநில fபதேப்பூர் மாவட்டத்தில் , ஒரு பள்ளிவாசலில் மாட்டுக்கறி உள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து ஒரு பள்ளிவாசல் ,அதற்கு அருகில் இருந்த ஒரு மதரஸா மற்றும் ஒரு வீடும் ஒரு வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலை கொளுத்தும் முன்னர் உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து அங்கிருந்த புனித நூல்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடைபெற்ற பொழுது மக்கள் யாரும் பள்ளிவாசலில் இல்லாமல் இருந்த காரணத்தால் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பள்ளிவாசல் முற்றிலுமாக சிதிலமடைந்துள்ளது. அருகிலிருந்த ஒரு வீடும் தீக்கிரையானது.

View this post on Instagram

A post shared by DOAM (@doamuslims)


இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தால் அவ்விடத்தை விட்டும் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.

இது குறித்த செய்தியை அல் ஜாமியாத் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் மூன்று நாட்களுக்கு முன்னாள் நடைபெற்றதாக தெரிகிறது. இது குறித்து எந்த ஒரு செய்தி நிறுவனமும் பெரிதாக செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது