States News

காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் : இந்தியா அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை – ஐ.நா. குற்றச்சாட்டு

காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா மனித உரிமை ஆணையம் கடந்தாண்டு ஜூனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையம் (OHCHR) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

⚫⚫இந்நிலையில், இதே போன்று கடந்த 2018 மே முதல் 2019 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நடந்த மனித உரிமைகள் குறித்து ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.

Source: viveksinghphoto thehindu | Image Courtesy: indianexpress | ibnlive | indianexpress | benarnews | bbci

⚫⚫அந்த அறிக்கையில், `‘கடந்த 12 மாதங்களில் இப்பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கடந்த பல ஆண்டுகளை விட அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

⚫⚫இந்தியாவும் பாகிஸ்தானும் உறுதியான நடவடிக்கை எடுப்பதில் தோல்வி அடைந்துள்ளன’ என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய பாஜக அரசு கண்டனம்!

⚫⚫ஐநா அறிக்கைக்கு மத்திய பாஜக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், `ஐநாவின் அறிக்கை தவறானது, உள்நோக்கம் (?) கொண்டது. இது பழைய பொய்யான அறிக்கையின் தொடர்ச்சியே. பாகிஸ்தானிலிருந்து நடத்தப்படும் எல்லை கடந்த தீவிரவாதம் பற்றி அதில் குறிப்பிடவில்லை.

⚫⚫இது இந்தியாவின் இறையாண்மைக்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. இந்த அறிக்கை, உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டையும், எல்லை கடந்த தீவிரவாதத்தையும் வெளிப்படையாக ஆதரிக்கும் நாட்டையும் சமப்படுத்தும் முயற்சியாக தெரிகிறது. இதற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது’ என்றார்.