CAA Tamil Nadu Thol. Thirumavalavan

சி.ஏ.ஏ: ‘நாளைய சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்போம்’ : தொல் .திருமாவளவன் அறிவிப்பு!

இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில் நாளை தமிழக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தொல்.திருமாவளவன், எம்.பி ஆதரவு தெரிவித்துள்ளார்.

‘சி.ஏ.ஏ வை நிராகரிப்போம், என்.பி.ஆர் கணக்கெடுப்பு நடத்தமாட்டோம்’ என தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு இசுலாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்புத் தெரிவித்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அருணன் தெரிவித்துள்ள கருத்து.