CAA Intellectual Politicians

சி.ஏ.ஏ ஆதரித்து பட்டம் விட்டதன் மூலம் தேச விரோதிகளின் முகங்களில் அறைந்து விட்டேன்- பிரக்யா பெருமிதம்!

புதன்கிழமை மகர சங்கராந்தியை முன்னிட்டு சி.ஏ.ஏ, காஷ்மீரின் 370-பிரிவு ரத்து மற்றும் ராமர் கோவில் தீர்ப்பு ஆகியவற்றை ஆதரித்து தீவிரவாத குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் காத்தாடிகளை பறக்கவிட்டார்.

மேலும் இதன் மூலம் “CAA ஐ எதிர்க்கும் தேச விரோதிகள்” முகங்களில் “அறைந்துள்ளதாகவும்” அவர் கூறினார். “வெற்றிகளோடு நம் நாடு உயரமாக பறந்து செல்வதை இந்த பட்டம் குறிக்கிறது. மகர சங்கராந்திக்கு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பிரக்யா கூறினார்.

மத்திய பிரதேச முதல்வர் மாநிலத்தில் சி.ஏ.ஏ அமல்படுத்தப்படாது என்று கூறியுள்ளாரே என்று கேட்கப்பட்டதற்கு, இந்த சட்டம் நிலைக்கும். வெற்றி பெரும். இது நாட்டு மக்களின் நலனை கவனத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாக பிரக்யா தெரிவித்தார்.