shashi tharoor
Hindutva Political Figures Shashi Tharoor

மோதியின் ஆட்சியின் கீழ் ‘கும்பல் வன்முறை சம்பவங்கள்’ அதிகரித்து வருகின்றன!- சசி தரூர் கடும் தாக்கு!

மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகள் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியியின் கீழ் அதிகரித்து வருகின்றன என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அகில இந்திய நிபுணத்துவ காங்கிரஸ் (ஏஐபிசி) கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மோடி ஆட்சியை கடுமையாக சாடினார். “மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல், கடந்த 6 ஆண்டுகளாக நாம் எதை பார்த்து கொண்டிருக்கிறோம்? புனேவில் மொஹ்சின் […]

tabrez ansari wife
Hindutva Indian Judiciary Lynchings

‘தப்ரெஸ் அன்சாரி’ கொலை செய்யப்படவில்லை(!) போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! – திசைமாறி செல்லும் கும்பல் வன்முறை வழக்கு!

அவர் இறந்த இரண்டு நாட்களுக்கு பிறகு நான் கர்ப்பமாக உள்ளேன் என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் எனது கணவனை இழந்த சில நாட்களிலேயே எனது வயிற்றில் இருந்த சிசுவையும் பறிகொடுத்தேன். எனது உடலால் மன அழுத்தத்தை தாங்க முடியாமல் போனது தான் இதற்க்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறினர்.

kashmiri attacked
Lynchings Rajasthan

ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞரை “பெண் உடை அணிவித்து” கம்பத்தில் கட்டி கடும் தாக்குதல்.!

மிர் ஃபைஸை பைக்கில் பலவந்தமாக ஏற்றிச்சென்று ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து அவரை கட்டாயப்படுத்தி பெண்கள் அணியும் ஆடையை அணிவிக்க செய்துள்ளனர்.

Indian Judiciary Lynchings

புதிய இந்தியா ! -பெஹ்லு கான் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விடுதலை !

பெஹ்லு கான் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விடுதலை- நீதிமன்ற வளாகத்தில் “பாரத் மாதா கி ஜே” என்று கோஷமிட்டு கொண்டாடிய கும்பல். கடந்த ஏப்ரல் 1, 2017 ஆம் ஆண்டு பெஹ்லு கான் என்பவர் தனது மகன்களுடன் ஜெய்ப்பூர் மாட்டுச் சந்தையில் உரிய ரசீதுடன் மாடுகளை வாங்கி சென்று கொண்டுருந்த பொழுது அவருடைய வாகனத்தை  பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உள்ள பசு  தீவிரவாத குண்டர்கள் வழி மறித்தனர்.வாகனத்தின் உள் இருந்த பெஹ்லு கானை […]

mob lynching muslims
Lynchings

மீண்டும் ஒரு கும்பல் வன்முறை சம்பவம் – கர்நாடகா!

முஸ்லிம்கள் மீது தொடரும் கும்பல் வன்முறை தாக்குதல்கள் ! முஹம்மத் ஷபீர் என்பவர் வாடகை சவாரி ஆட்டோ ஓட்டுபவர். இவர்  மாநகராட்சி பணியில்  மிருக கழிவுகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார். திடீரென டீசல் தீர்ந்து விடவே ஆட்டோ நின்று விட்டது. அப்போது அங்கு குழுமிய 20-25 குண்டர்கள் இவரை கடும் சொற்களால் வசைபாடி, கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர் கண்களில் டீசலை ஊற்றியுள்ளனர். “நான் உயிர் தப்பியது மிக பெரும் அதிசயம் தான். என் […]

Jai Shri Ram’ has become a provocative war-cry: 49 celebrities write to PM Modi, seek action on intolerance, mob lynching
Hindutva Lynchings Modi

“ஜெய் ஸ்ரீராம் என்பது போர்க்கால அழுகையாக மாறிவிட்டது” : கும்பல் வன்முறைகளுக்கு எதிராக மணிரத்னம் உட்பட 49 திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் பிரதமருக்கு கடிதம்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கும்பல் வன்முறை சம்பவங்களை வெறுமென விமர்சித்துவிட்டு செல்வது போதாது என்றும், ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு கடுமையான குற்றமாக ஆக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.. நாற்பதுக்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் தூண்டிவிடக்கூடிய போர்க்கால முழக்கமாக மாறி, நாட்டின் பல்வேறு இடங்களில் கும்பல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். “முஸ்லீம்கள், […]

Lynchings NIA Political Figures States News Tamil Nadu

“NIA முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து கைது செய்கிறது”-சட்டமன்றத்தில் தமீமுன் அன்சாரி, அபூபக்கர் குற்றச்சாட்டு!

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக எம்.எல்.ஏவும், மனிதனேய ஜனநாயக கட்சி நிறுவனருமான எம்.தமிமுன் அன்சாரி கடந்த வியாழக்கிழமை சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தார் மேம்பாடு குறித்த விவாதத்தின் போது என்.ஐ.ஏ அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதும் , உடனே அவர்கள் போட்டோக்கள் மற்றும் இதர விவரங்களை மீடியாக்களில் வழங்கி, பின் மறு தினமே இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று […]

muslim man beaten
Hindutva Lynchings Maharashtra

மஹாராஷ்டிராவில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற கட்டாயப்படுத்தி இம்ரான் இஸ்மாயில் மீது குண்டர்கள் கடும் தாக்குதல்.

வெள்ளிக்கிழமை(19-7-19) மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இம்ரான் இஸ்மாயில் என்பவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்னர். ஹோட்டல் ஊழியர் இம்ரான் இஸ்மாயில் படேல் தனது புகாரில் பேகம்புரா பகுதியில் உள்ள ஹட்கோ கார்னர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது சுமார் பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார். அவர்கள் அவரை கடுமையாக தாக்கி , “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தியதாக […]

Bihar lynching
Bihar Lynchings States News

பீகாரில் கால்நடையை கடத்த வந்ததாக சந்தேகித்து மூன்று நபர்கள் அடித்து கொலை !

சமீப காலமாக வடஇந்தியாவில் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொண்டு கும்பல் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. பீகார் மாநிலத்தின் பனியாபூர் பகுதியில் (இன்று ) வெள்ளிக்கிழமை (19.7.19)காலை கால்நடைகளை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து மூன்று பேரை ஊர் மக்களில் ஒரு கும்பல் அடித்து கொன்றுள்ளனர் பனியாபூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பைகம்பர்பூர் கிராமத்தில் அதிகாலை வேலையில் இந்த சம்பவம் நடந்தது. இறந்தவர்கள் ராஜு நாத் , பைட்ஸ் நாத் மற்றும் நவ்ஷாத் குரேஷி […]

Gaumata Hindutva Lynchings Political Figures

இந்தியாவில் மாட்டிறைச்சி தடை செய்ய விரும்பியவர்களுக்கு மகாத்மா காந்தி அன்றே சொன்னது என்ன ?

கீழுள்ள பதிவு காந்தி பாரம்பரிய ஆன்லைன் போர்ட்டலில் வெளியிட்டுள்ள காந்தியின் பிரார்த்தனை சொற்பொழிவின் ஒரு பகுதி (ஜூலை 25, 1947, மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், vol :88) …மாடுகளை (இறைச்சிக்காக) கொல்ல தடை விதிக்கக் கோரி தனக்கு சுமார் 50,000 அஞ்சல் அட்டைகளும், 25,000 முதல் 30,000 கடிதங்களும், பல்லாயிரக்கணக்கான தந்திகளும் வந்துள்ளன என்று ராஜேந்திர பாபு என்னிடம் கூறுகிறார். இதைப் பற்றி நான் முன்பு உங்களிடம் பேசினேன்.இத்தனை தந்தி ,கடிதங்கள் எல்லாம் ஏன் அனுப்ப […]

Political Figures Uttar Pradesh

மத கோஷங்களை கட்டாயப்படுத்தி திணித்து வன்முறையில் ஈடுபடும் போக்கிற்கு -மாயாவதி கடும் கண்டனம் !

லக்னோ, ஜூலை 15 (PTI ) மதப் கோஷங்களை எழுப்ப மக்களை கட்டாயப்படுத்தும் ஒரு தவறான நடைமுறை உத்தரபிரதேசம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் தொடங்கியுள்ளதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று (15-7-19)கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.      கடந்த சனிக்கிழமை உபி மாநில பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய […]

Islamophobia Lynchings Uttar Pradesh

பள்ளிவாசல் இமாமின் தொப்பியை கழற்றி எரிந்து ,தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய கோழை குண்டர்கள் -உபி மாநிலத்தில் தொடரும் காட்டுமிராண்டித்தனம் !

முசாபர்நகரில் பள்ளிவாசல் இமாமாக பணி புரிபவர் இம்லாக்-உர்-ஹ்மான். இவர் தனது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரை நெருங்கிய குண்டர்கள் , தொப்பியை கழற்றி எரிந்து , கடுமையாக அவரை தாக்கி, தாடியையும் பிடித்து இழுத்துள்ளனர். பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கியதர்காக 12 பேர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக PTI தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை(13.7.19) முசாபர்நகர் மாவட்டத்தில் இமாம் தனது மோட்டார் […]

Lynchings States News Uttar Pradesh

பஜ்ரங் தள் பாஜகவினர் அட்டூழியம் ! ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்ததால் மாணவர்கள் மீது உபி. யில் கொலைவெறி தாக்குதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் சிலரை பஜ்ரங் தள் மற்றும் பாஜகவினர் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட கட்டாயப்படுத்தி ஜூலை 11ம் தேதி அடித்து உதைத்ததாக ஜமா மசூதி இமாம் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் ! தொழுகைகளை முடித்து விட்டு மைதானத்தில் 4 மாணவர்கள் விளையாடச் சென்றுள்ளனர். மாணவர்களை ஜெசி ஸ்ரீ ராம் என்று கூறுமாறு கட்டாயபடுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் கூற மறுத்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த குண்டர்கள் மாணவர்களை […]

gau rakshaks cow terrorists
Lynchings West Bengal

மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுத்ததால் 5 முஸ்லிம் இளைஞர்களை கடுமையாக தாக்கிய கயவர்கள்.

Published: 3.7.2019 (7.40pm) மேற்கு வங்கத்தில் உள்ள கரன்திகி எனும் ஊரில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் நேற்று 02-07-2019 (செவ்வாய்க் கிழமையன்று) கிராமத்திலிருந்த குட்டையில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அங்கு வந்த பாஜக கட்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை மாட்டு கொள்ளையர்கள் என்று கூறியும் , ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்தியும் கடுமையாக தாக்கி உள்ளனர். இது குறித்து வடக்கு தினாஜ்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான ஐவரில் […]

west bengal lynching
Islamophobia Lynchings States News West Bengal

மீண்டும் பயங்கரம்! 24 வயது இஸ்லாமிய இளைஞர் பைக் திருடி விட்டதாக கூறி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை!

தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயாத நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா எனும் மாவட்டத்தில் மேலும் ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. சனாவுல்லா ஷெய்க் இன்று 24 வயதான முஸ்லிம் இளைஞரை பைக் திருடி விட்டார் என்று குற்றம் சுமத்தி கடந்த வெள்ளி கிழமை அடித்தே கொன்று உள்ளனர். ஆனால் அவர் பைக் திருடியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக கொலைகார […]