BJP Intellectual Politicians

பிரியாணிக்காக தான் மக்கள் கெஜ்ரிவால் கட்சிக்கு ஓட்டு போட்டனர்- பாஜக எம்பி கண்டுபிடிப்பு

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லியில் உள்ள ஷாஹீன் பாக், ஜாமியா மற்றும் சீலாம்பூரில் உள்ள போராட்டக்காரர்களுக்கு, அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் பிரியாணி வழங்கி வருவதாகவும், அதற்கு நன்றி கடனாக தான் அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து வருவதாகவும் பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா கூறியுள்ளார்.

மேலும் டில்லியில் உள்ள மக்கள் ராஷ்டிரவாதிகள், தேசபக்தர்கள் எனவே அவர்கள் நாட்டை துண்டாட அனுமதிக்க மாட்டார்கள் என கூறி ட்விட்டரில் அவர் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். எனினும் இது குறித்து தேர்தல் ஆணையம் இது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் டெல்லி மக்களை “பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வார்கள்” என்று கூறியதற்காகவும் டெல்லி முதல்வரை “பயங்கரவாதி” என்று அழைத்ததற்காகவும் பர்வேஷ் வர்மாவுக்கு 96 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.