Lynchings

‘காரி ஒவைஸை’ அடித்தே கொன்ற கொடூரர்கள்;டில்லியில் நடந்த பயங்கரம்!

காரி ஓவைஸ் ஹெட்ஃபோன்கள் வாங்க டெல்லியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். கடையில் இருந்த எந்த மாடலும் அவருக்கு பிடிக்கவில்லை. ஆனால் ஏதேனும் ஒன்றை வாங்கியே ஆக வேண்டும் என்று வம்பிழுத்துள்ளார்.ஓவைஸ் வாங்க மறுத்துள்ளார். எனவே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.பிறகு கடை உரிமையாளருடன் சேர்ந்து அங்கிருந்த மற்றவர்களும் ஒவைஸை தாக்க ஆரம்பித்துள்ளார்.

https://twitter.com/intellectroll/status/1166303972090667009

இருவரும் சேர்ந்து காட்டுத்தனமாக தாக்கியதில் காரி ஓவைஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் மரணமடைந்தார்.இந்த கொலை நள்ளிரவு 1 மணி அளவில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் – ரயில் நிலையம் அருகில் நடைபெற்றுள்ளது.இதை குறித்து ‘ஜீ ஸலாம் ‘ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மத வெறுப்பு ரீதியிலான காரணம் ஏதுமில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சம்பவம் நாட்டின் தலைநகரில் நடந்துள்ளது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.கும்பல் வன்முறை மனப்பான்மைக்கு என்றைக்கு விடிவுகாலம் வருமோ !