Corona Virus

மின்னல் வேகத்தில் கொரோனா சமூக தொற்று பரவுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்..

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

வெளி நாட்டில் இருந்து வந்தவர் கட்டாயமாக 28 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் சமூக தொற்று வேகமாக பரவி வருகிறது என்றும் கொரோனா சமூக பரவலை தடுக்கவே தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மிகவும் சவாலான பணியை சுகாதாரத்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருவதாக கூறிய அமைச்சர் விஜய பாஸ்கர் மதுரையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் (54 வயதான) நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் செல்லாமல் மதுரையிலேயே வசித்து வரும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.