Kashmir

ஒரு காஷ்மீரி – இஸ்ரோ தலைவர் சிவனுக்கு எழுதிய மடல்! டியர் மிஸ்டர் சிவன்..!

இஸ்ரோ குழுவுக்கும் அதனை தலைமை ஏற்று நடத்திச் செல்லும் உங்கள் தலைமைக்கும் முதலில் எனது வாழ்த்துக்கள்.. 
சந்திரயான்-2 தொன்னூறு சதவீதம் வெற்றிதான். கடைசி நேரத்தில் விக்ரம் லேண்டர் தனது தொடர்பை கட்டுப்பாட்டு அறையிலிருந்து துண்டித்து கொண்டது. அதன் நிலை தற்போது என்ன என்பதும் நம் அனைவருக்கும் மர்மமாக உள்ளது. இதனால் மனம் வெதும்பி நீங்கள் கண்ணீர் விட்டு அழுததை பார்த்தேன். எந்த அளவு உங்கள் மனம் வேதனைப்படும் என்பதையும் நான் அறிவேன்.

நான் கூட எனது தாயாரோடு கடந்த ஒரு மாதமாக தொடர்பில்லாமல் இருக்கிறேன். எனது தாயார் இருப்பது ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில். அவரது நிலை என்ன என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லை. 

சந்திரயான் தொடர்பு துண்டிக்கப்பட்டபோது எந்த அளவு மன அழுத்தத்தோடு இருந்தீர்களோ அதை விட அதிக மன அழுத்தத்தோடு உள்ளேன். உங்கள் முதுகை தட்டிக் கொடுக்க பிரதமர் மோடி உங்களோடு இருந்தார். எனது முதுகை தட்டி எனது மன அழுத்தத்தை குறைப்பது யார்? என்னைப் போன்ற லட்சக்கணக்கான காஷ்மீர் இளைஞர்களின் துயர் துடைப்பவர் யார்?

இப்படிக்குதினம் துன்பங்களை சுமக்கும் காஷ்மீர் இளைஞன்.

Source: FAIZAN BUKHARI