Kashmir

காஷ்மீர்; இஸ்லாத்தில் தற்கொலை அனுமதிக்கப்பட்டிருந்தால், நான் அதைச் செய்திருப்பேன்! -முஸாபர் நபி!

காஷ்மீர்: புல்வாமா பகுதியின் முசாபர் நபி என்பவரின் தொடைகள், மார்பு மற்றும் உள்ளங்கை பகுதிகளில் மின்சாரம்  பாய்ச்சப்பட்டும் குச்சிகள் மற்றும் கம்பிகளால் அடிக்கப்பட்டு உள்ள நிலையில் இருக்கும்  புகைப்படம் என்று சர்வதேச ஊடகமான தி வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுளளது. பல சிராய்ப்புகள், பிடுங்கப்பட்ட நிலையில் நகங்கள் , வாந்தி, நெற்றி மற்றும் கை பகுதிகளில் புற அதிர்ச்சி காயங்கள் போன்றவை ஏற்பட்டுள்ளன என்று  மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முசாபருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களால் ஒரு வாரம் படுத்த படுக்கையான நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஒரு வாரத்திற்கு பின்னர் கைத்தாங்கலாக கழிவறை செல்லக்கூடிய நிலையில் தற்போது  அவரது உடல்நிலை உள்ளது. தனக்கு  ஏற்பட்ட இந்த கொடுமைகளை குறித்து அவர் கூறுகையில் “இஸ்லாத்தில் தற்கொலை செய்து கொள்வது  அனுமதிக்கப்பட்டிருந்தால், நான் அதைச் செய்திருப்பேன்” என்று நபி கூறியதாக வாஷிங்க்டன் போஸ்ட் ஆக்கத்தில் இடம் பெற்றுள்ளது..

No photo description available.

மேலும் ரியாஸ் அஹ்மத் என்பவரை தலைகீழாக தொங்கவிட்டு மர்ம உறுப்பு பகுதிகளில் மின்சாரம் பாய்ச்சியும், உடல் முழுக்க லத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வாஷிங் டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு 19 நபர்களை பேட்டி கண்டுள்ளது வாஷிங்க்டன் போஸ்ட்.எனினும் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் , மருத்துவமனை ஆவணங்களையும் கூட இந்திய தரப்பு முற்றிலுமாக  மறுத்துள்ளது. 
Photo Courtesy: The Washington Post & Twitter