Uttar Pradesh

உபி: வீட்டின் முன்னே ஹோலி கொண்டாட அனுமதி மறுத்த 60 வயது முதியவர் அடித்து கொலை !

உபி: மெவதி டோலா பகுதியில், தங்கள் வீட்டிற்கு முன் ஹோலி கொண்டாட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த 60 வயது முதியவர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இத்தாக்குதல் சம்பவத்தில் அவரது குடும்பத்தினர் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

காலை 10 மணியளவில் போதையில் தள்ளாடி கொண்டே ஹோலி கொண்டாடி கொண்டிருந்த ஒரு கூட்டம் , அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கட்டைகள் மற்றும் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (நகர) பிரசாந்த் குமார் பிரசாத் தெரிவித்தார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். எனினும் காப்பாற்ற முயன்ற இரண்டு பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட அனைவரின் மீதும் அந்த கும்பல் தாக்கியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கியதாக கூறினார்.

எக்டில் காவல் நிலையப் பகுதியிலிருந்து நடந்த மற்றொரு சம்பவத்தில், மது போதையில் இருந்த ஒரு இளைஞர் அதிவேகமாக ஒரு டிராக்டரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஆறு பேர் காயமடைந்தனர்.மின் கம்பத்தில் மோதியதில் டிராக்டர் சேதமடைந்தது. பின்னர் இளைஞர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.