Crimes Against Women Tamil Nadu

10 ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்ற கொடூரம் ..

விழுப்புரம் சிறு மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களை கட்டி வாயில் துணியை வைத்து அதே கிராமத்தில் அதிமுக கிளை கழக செயலாளர் கலியபெருமாள் முன்னாள் கவுன்சிலர் முருகன் இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.

95 சதவிகித தீக்காயத்துடன் போராடிய சிறுமி ஜெயஸ்ரீ இறந்துவிட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்க செய்யும்.

கோவை வேளாண் கல்லூரி மாணவியர் மூவரை தர்மபுரி கொன்றவர்கள் அதிமுகவினர் சிலர், அதற்கடுத்த கொடிய சம்பவம் இது. சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீ போன்ற சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றும்.

https://twitter.com/AnsarKRB/status/1259759474337816576

ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவி உள்ள நிலையில் விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இத்தகைய கொடிய நிகழ்வுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர்ந்து காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சாய்ந்து விடாமல் நடுநிலையோடு சட்டத்தின் முழு வலிமையையும் பயன்படுத்த வேண்டும்.

ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.