Tamil Nadu

எளியோருக்கும் பசித்தோருக்கும் உணவளிக்கும் மே17 இயக்கத் தோழர்கள்!

மே17 இயக்கத் தோழர்கள் பெரும் பொருளாதார பின்னனி கொண்டவர்களல்ல. கடுமையான உழைப்பால் தம் குடும்பத்தினரோடு இச்சமூகத்தையும் பாதுகாக்கும் உறுதி பூண்டவர்கள். மிக நெருக்கடியான பொருளாதாரச் சூழலுக்கு நடுவிலும் பசித்தவர்களுக்கான உதவிகளை கடந்த ஒரு மாதமாக செய்து வருகிறார்கள். சென்னை பூந்தமல்லி, கே.கே.நகர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், காட்பாடி என பல பகுதிகளில் தோழர்கள் பணியாற்று வருகிறார்கள்.

தொடர்ந்து மக்களோடு துணை நிற்கிறார்கள். மறுபுறம் ‘இடுக்கண் களை’ எனும் முயற்சியால் பல்வேறு யோசனைகளை, தொடர்புகளை எளியமக்களுக்காக பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். விவசாயிகளுக்கு தேவைப்படும் தகவல்களை, அவர்களது விளைபொருட்களை கொண்டு செல்வதற்குரிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். நோயாளிகளுக்கு தேவைப்படும் குருதிக் கொடையை செய்து வருகிறார்கள்.

நீங்களும் இவர்களோடு கைகோர்க்க விரும்பினால் 9884072010 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.