Corona Virus Tamil Nadu

கோவை:காவல்துறையினருக்கு உணவு விநியோகம் செய்துவந்தவருக்கு கொரோனா; காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை!

கோவை துடியலூரைச் சேர்ந்த 61 வயதான தன்னார்வலர் ஒருவர் காவல்துறையினருக்கு உணவு வழங்கிவந்துள்ளார். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 40 காவலர்களுக்கு கொரானோ பரிசோதனை இன்று (ஏப்.14) மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக இருமுறை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இரண்டு முறையும் கொரோனா இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவர, மூன்றாம் முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது.

கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட துடியலூர் காவல்துறையினருக்கு உணவு விநியோகம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் 40 காவலர்கள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அண்டை வீட்டார், நண்பர்கள் என சுமார் 120 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தன்னார்வலர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.