Gujarat

முதலமைச்சர் மோடி பொதுக்கூட்டத்தின் போது வாகனங்களுக்கு தீவைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் விடுதலை…

கடந்த 2007ல் சூரத்தின் வராச்சா பகுதியில் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வெளியே இருந்த 40 பைக்குகளுக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நேற்று விடுவித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்.

புகார்தாரர் மற்றும் குற்றவாளிகள்:

பாஜக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை எதிர்த்த சர்தார் உத்கர்ஷ் சமிதி உறுப்பினர்கள் மீது பைக் உரிமையாளர்களில் ஒருவரான மன்சுக் கச்சதியா கபோதரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வாகன தீ விபத்து தொடர்பாக ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். பகிரத் பித்தாவிவாலா (இப்போது பாஜக வில் உள்ளார்) , அசோக் ஜிராவாலா (இப்போது காங்கிரஸ் கட்சி நகராட்சி கவுன்சிலர்), பிக்குபாய் ஜீவர்பாய், சஞ்சய் டிராஜ்லால், ஜாடிஷா குந்த், தல்சுக் சோவதியா, ஜிது படேல், அஜய் படேல் மற்றும் சுரேஷா வசேரா வசேரா ஆகியோரே அந்த 9 நபர்கள்.

ஆதாரங்கள் இல்லை:

பொலிஸ் விசாரணையும், சாட்சிகளின் வாக்குமூலங்களும் ஒன்பது பேர் பைக்குகளுக்கு தீ வைத்ததை உறுதிப்படுத்தவில்லை என்று நீதிபதி பாபுலால் போஹ்ரா கூறினார். மேலும், இந்த சம்பவத்தில் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. சர்தார் உத்கர்ஷ் சமிதி யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அதன் உறுப்பினர்களின் விவரங்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஒய் பி வாலா, “தீர்ப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்தார்..

காங்கிரஸ்காரர்கள் என்பதால் தான் வழக்கு:

வார்டு எண் 3 (வராச்சா, சர்தானா மற்றும் சிமாடா பகுதிகள்) சூரத் நகராட்சி கவுன்சிலர் அசோக் ஜிராவாலா கூறுகையில், “நாங்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதால் போலீசார் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் உண்மையை அறிந்து எங்களை விடுவித்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். ” என்று கூறினார்.