CAA Intellectual Politicians Shaheen Bagh

‘ஷஹீன் பாகில் போராடுபவர்கள் உங்கள் வீடு புகுந்து கொல்வார்கள், கற்பழிப்பார்கள்’ – வெறுப்பை கக்கும் பாஜக எம்பி பர்வேஷ்..

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஷஹீன் பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்தில் அகற்றப்படுவார்கள் என்று அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் அறிவித்துள்ளார். “போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைவார்கள், உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கற்பழிப்பார்கள்”. என வெறுப்பு பேச்சையும் பேசியுள்ளார் அவர்.

டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒருபுறம் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது மறுபுறம் CAA க்கு எதிரான தொடர் போராட்டம் ஷஹீ ன் பாக்கில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினரும் பாஜக வின் தலைவருமான பர்வேஷ் வர்மா ஷஹீன் பாகில் அமைதியாக போராடும் மக்களை கொலைகாரர்கள், வன்முறையாளர்கள் என்று அவர் கூறியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது “ஷஹின் பாக்கில் போராடுபவர்கள் வன்முறையாளர்கள். அவர்கள் உங்கள் வீடுகளில் நுழைந்து உங்கள் பெண்களை கற்பழிப்பார்கள், உங்கள் மக்களை கொலை செய்வார்கள், எனவே மோடிக்கு வாக்களியுங்கள். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். இல்லையானால் நாளை மோடி அமித் ஷா நினைத்தாலும் கூட உங்களை காப்பாற்ற முடியாமல் போய் விடும். எனவே பாஜக வுக்கு மக்கள் ஒட்டு போட்டு தெர்ந்தெடுங்கள். ” என்றார். அமைதியாக போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் பாஜக தலைவர்களை சமூகவலைதளவாசிகள் கண்டித்து வருகின்றனர்