Intellectual Politicians

டில்லி காற்று மாசுபாட்டிற்கு பாகிஸ்தான் சீனா காரணம் – பாஜக தலைவர் !

டெல்லி-என்.சி.ஆர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு மிகவும் மோசமாக உள்ள நிலையில், இது குறித்து நேற்று (5-11-19) கருத்து தெரிவித்துள்ள உபி. பாஜக தலைவர் மீரட் வினீத் அகர்வால் ஷர்தா: மோதி மற்றும் அமித் ஷாவின் சிறப்பான செயல்பாடுகளை பொறுத்து கொள்ள முடியாமல் பாகிஸ்தான் மற்றும் சீனா இந்தியாவிற்குள் விஷ வாயுவை செலுத்தியுள்ளன என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் விஷ வாயுவை செலுத்தியுள்ளதா என்று தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மோதியும் அமித் ஷாவும் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணர் அர்ஜுனரை போல, இவர்களால் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து விட முடியும் என்றும் கூறியுள்ளார்.