Hindutva Political Figures Shashi Tharoor

மோதியின் ஆட்சியின் கீழ் ‘கும்பல் வன்முறை சம்பவங்கள்’ அதிகரித்து வருகின்றன!- சசி தரூர் கடும் தாக்கு!

மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகள் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியியின் கீழ் அதிகரித்து வருகின்றன என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அகில இந்திய நிபுணத்துவ காங்கிரஸ் (ஏஐபிசி) கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மோடி ஆட்சியை கடுமையாக சாடினார்.

“மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல், கடந்த 6 ஆண்டுகளாக நாம் எதை பார்த்து கொண்டிருக்கிறோம்? புனேவில் மொஹ்சின் ஷேக் கொல்லப்பட்டதில் ஆரம்பித்தது.அடுத்து வீட்டில் மாட்டுக்கறி வைத்திருப்பதாக கூறி முஹமது அக்லாக் என்பவர் கொல்லப்பட்டார்” (விசாரணையில் அக்லாக் வீட்டில் இருந்தது மாட்டுக்கறி அல்ல என்று தெரிய வந்தது, அது மாட்டுக்கறியாகவே இருந்தாலும் கூட ஒருவரை கொல்லும் உரிமையை அவர்களுக்கு கொடுத்தது? யார்) என்று அவர் கருத்து தெரிவித்தார்.

பின்னர் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்ட தப்ரெஸ் அன்சாரி , பெஹ்லு கான்,ஜுனைத் ஆகியோரையும் நினைவு கூர்ந்தார் சசி தரூர். பின்னர் “இது தான் நமது பாரதமா? இதை தான் நமது இந்து தர்மம் போதிக்கிறதா ?. அடித்துக்கொல்கின்ற போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற சொல்லி வற்புறுத்துகிறார்கள், இது இந்து தர்மத்திற்கு அவமானம். அதேபோல கடவுள் ராமர் பெயரை சொல்லி கொலைகள் செய்வது, அவருக்கே அவமானம்.” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார் சசி தரூர்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி திணிப்பு குறித்த கருத்தையும் மறுத்து பேசினார் சசி தரூர்