Tamil Nadu

உள்ளாட்சி தேர்தல் : 79 வயதில் வெற்றி பெற்று அசத்திய மூதாட்டி !

கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியிடப்பட்டு வரும் வேளையில் மதுரையை சேர்ந்த 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அவர் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த பதவியில் ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு தோல்வியுற்ற மூதாட்டி விடாமுயற்சியுடன் போராடி 3ஆவது முறையில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி வழங்கியுள்ளார்.

இவரின் விடா முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள்!